(Reading time: 1 minute)

17. காதல் என்பது - ஜான்சி

Love is

பிரிவென்னும் ஓர் கொடுமை
காதலில் வந்து விட்டால்,

வெற்று ஞாபகங்களாகிப் போன....

அவனோ(ளோ)டு கழிந்த நேரங்களை,

இருவரின் உரையாடல்களை,

சந்திப்புக்களை,

சண்டைகளை,

கோபங்களை,

வாக்குவாதங்களை...

ஊருக்கு உரைக்காமல்,
உள்ளுக்குள் தான் புதைக்கும்.

அவனை(ளை)த் தாழ்த்த எண்ணாமல்,
தன்னோடு தான் மறைக்கும்.

விளம்பரத்தை நாடாமல்,
அமைதியாய் இருக்கும்.

தன் வலி மறந்தது போல்,
அவன்(ள்) நன்மை மட்டுமே நினைக்கும்.

இதுதான் காதலா!

Poem 16

Poem 18

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.