03. எழுந்து வா - ஜான்சி
யார் என்னச் சொல்வார் என நினைக்கின்றாய்..
நீ விழுகையில் உவகையும்,
எழுகையில் வியப்பையும்,
உந்தன் தோல்வியில் போலிப் பரிவையும்,
வெற்றியில் பொருமலோடு புன்னகையும்,
மட்டும் தரும் உலகில் ....
யாரென்னச் சொல்வாரோ என நீ ஏன் நினைக்கின்றாய்?
வாழ்வு ஒருமுறை-நீ
அதை வாழ்வதும் ஒருமுறை.
வீண் எண்ணம் அகற்றி
உனக்காக வாழ,
எழுந்து வா தோழா
உயர்ந்திட எழுந்து வா!
{kunena_discuss:779}