(Reading time: 1 minute)

03. எழுந்து வா - ஜான்சி

Keep going

யார் என்னச் சொல்வார் என நினைக்கின்றாய்..

நீ விழுகையில் உவகையும்,
எழுகையில் வியப்பையும்,

உந்தன் தோல்வியில் போலிப் பரிவையும்,
வெற்றியில் பொருமலோடு புன்னகையும்,

மட்டும் தரும் உலகில் ....

யாரென்னச் சொல்வாரோ என நீ ஏன் நினைக்கின்றாய்?

வாழ்வு ஒருமுறை-நீ
அதை வாழ்வதும் ஒருமுறை.

வீண் எண்ணம் அகற்றி
உனக்காக வாழ,

எழுந்து வா தோழா 
உயர்ந்திட எழுந்து வா!

Poem 02

Poem 04

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.