19. காதல் என்பது - ஜான்சி
தனிமை நேரங்களில் ,
அவனி(ளி)ன் நினைவுகள் துணையாகின்றன.
துன்ப வேளைகளில் ,
அவனி(ளி)ன் அன்பே மருந்தாகின்றது.
சோர்வு சூழும்போது,
மனக் கண்ணில் அவன்(ள்) புன்னகை கண்டு உற்சாகம் பெறுகின்றேன்.
மகிழ்ச்சி செய்திகளை,
முதலில் அவனு(ளு)டன் பகிரவே நினைக்கின்றேன்.
அவன்(ள்) எந்தன் அருகில் இல்லாதிருந்தும்,
எப்போதும் என்னுடன் இருக்கின்றான்(ள்)
அவனே(ளே) எந்தன் வாழ்வில்
மகிழ்வின் வண்ணமாய் திகழ்கின்றான்(ள்)
இதுதான் காதலா!
{kunena_discuss:779}