20. காதல் என்பது - ஜான்சி
காத்திருப்பது என்னும் எரிச்சல் மூட்டும் நிகழ்வு,
உனக்காக காத்திருக்கும் போது மட்டும் ஏன் பன்னீர் மழை குளுமை தருகின்றது.(?)
எத்தனைதான் ஆளுமை கொண்டவனானாலும்,
உனக்காக காத்திருக்கையில் மட்டும் ஏனோ..
தேர்வுக்கு காத்திருக்கும் மாணவன் போல்,
மழைக்கு காத்திருக்கும் சிறு தளிர்செடி போல்,
இதுவரையிலும் முகவடிவும் அறிந்திராத தன் மகவைக் காண....
மகப்பேறுக்கு காத்திருக்கும் தாய் போல்,
படபடப்பும், பரிதவிப்பும், பரவசமும் நிறைந்த உணர்வை தருகின்றது.
இதுதான் காதலா!
{kunena_discuss:779}