04. எழுந்து வா - ஜான்சி
வாழ்க்கை என்னும் வேடதாரி
தன் கோர முகம் காட்டி மிரட்டும்.
'ஐயகோ! எல்லாம் முடிந்தே விட்டது'
என ஆரூடம் சொல்லும்.
'உன்னை விட துன்புற்றவன் உலகிலேயே யாருமில்லை'
என்று பரிதாபம் காட்டும்.
'நீயும் பொய் , உந்தன் கோர முகமும் பொய்'யென்று
உதறித் தள்ளி எழுந்து வர,
உன் சூழல் அத்தனையும் நலமாய் மாறும் நிலைக் காண்பாய்.
எனவே,
நடந்தவை அனைத்தும் ஏற்கெனவே-உந்தன்
எல்லையினின்று கடந்தவை என உணர்ந்து
துணிவுடன் வாழ,
எழுந்து வா தோழா...
எழுந்து வா, எழுந்து வா.
{kunena_discuss:779}