(Reading time: 1 minute)

04. எழுந்து வா - ஜான்சி

Keep going

வாழ்க்கை என்னும் வேடதாரி

தன் கோர முகம் காட்டி மிரட்டும்.

'ஐயகோ! எல்லாம் முடிந்தே விட்டது'
என ஆரூடம் சொல்லும்.

'உன்னை விட துன்புற்றவன் உலகிலேயே யாருமில்லை'
என்று பரிதாபம் காட்டும்.

'நீயும் பொய் , உந்தன் கோர முகமும் பொய்'யென்று
உதறித் தள்ளி எழுந்து வர,

உன் சூழல் அத்தனையும் நலமாய் மாறும் நிலைக் காண்பாய்.

எனவே,

நடந்தவை அனைத்தும் ஏற்கெனவே-உந்தன்
எல்லையினின்று கடந்தவை என உணர்ந்து

துணிவுடன் வாழ,
எழுந்து வா தோழா...

எழுந்து வா, எழுந்து வா.

Poem 03

Poem 05

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.