ஏக்கம் - ஜான்சி
பக்கத்து இருக்கையில் தாயும் மகளும்....
சில்வண்டுப் போலச் சுற்றி சுற்றி வருவதும்,
சட்டென்று அம்மாவென்றுத் தாவி முத்த மழைப் பொழிவதும்,
கேள்விப்பட்ட அத்தனையும் அபிநயித்துச் சொல்வதும்,
கோபம் கொள்ளும் அன்னையைத் தன் குமிழ்ச் சிரிப்பில் கோபம் தணிப்பதுமான...
சிறுமியின் செய்கைகளை ரசிக்கையில்
தன்னையறியாமல் ஏனோ எழுகின்றது
பெண்குழந்தைக்கான ஏக்கம்.
{kunena_discuss:779}