25. காதல் என்பது - ஜான்சி
காதல் என்னும் மாயாஜாலம்
ஆஹாவென்று
காதலிக்கப் படாதோர் மனதிலும் வண்ணங்கள் பூசும்.
காதல் என்னும் மந்திரவாதம்
நமக்கு கிடைக்கவில்லையேவென்று
வாழ்வில் குறையற்றோர் மனதிலும் ஏக்கம் எழுப்பும்.
காதல் என்னும் உள்ளத்து மயக்கம்
போதை உட்கொள்ளாமலேயே
கிறக்கம் கொடுக்கும்.
காதல் என்னும் வணிகப் பொருளோ
கற்பனையாய், காவியமாய்
கவிஞர், கலைஞர்கள் கையில் விற்பனைப் பொருளாய் மாறும்.
காதல், காதல் காதல்
காதல் போயிற், காதல் போயிற்
சாதல், சாதல் , சாதல்
என்றுரைத்த முண்டாசுக் காரனை நூற்றாண்டுக்காலமாய் நினைக்க வைக்கும்.
காதல் உரைத்த பலரும் மாண்டுப் போக,
கருப் பொருளாய்,
காவியமாய்,
புவியின் ஈர்ப்பு விசையாய்,
வாழ்வின் தேடலாய்,
விழியின் மொழியாய்,
உள்ளத்தின் ஓசையாய்
காதல் மட்டும் அழியாமல்
காலங்கள் கடந்தும் வாழ்கின்றதே.....
இது தான் காதலா?!!
பின்னுரை: ஹாய் சில்ஜீ ஃப்ரண்ட்ஸ், மிகுந்த தயக்கத்தோடு ஆரம்பித்த என்னுடைய முதல் கவிதை தொடரின் 25 வது கவிதை வரை நான் பயணித்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு மிகவும் ஊக்கமளித்த, உற்சாகமூட்டிய சில்ஜீ டீமுக்கும் அனைத்து சில்ஜீ தோழமைகளுக்கும் என்னுடைய நன்றிகள்.
இன்னும் வரும் .....
{kunena_discuss:1090}