08. எழுந்து வா - ஜான்சி
வீழும் காரணம் ஆயிரம்,
வீழும் நேரங்கள் ஆயிரம்.
துன்பத்தில் சில நேரம்
துரோகத்தில் சில நேரம்.
நிரந்தரமற்ற இவ்வாழ்வினில்
நிலைக்காத சொந்தங்களின் - நிரந்தர
பிரிவில் துடித்தே சில நேரம்
துரோகத்தில் பிரிந்தோரின் எண்ணத்தை
அக்கணமே உதறி அகற்றிடு.
அன்புக் கொண்டோரின் பிரிவதனை
அவரன்புக்காய் சகித்திடு.
அன்புள்ளம் கொண்டோரின்
அன்புக்காய் வாழ்ந்திட
அவரெண்ணம் போல உயர்ந்து நீ வாழ்ந்திட,
சோர்ந்து வீழாமலே
எழுந்து வா, எழுந்து வா.....
{kunena_discuss:1090}