09. எழுந்து வா - ஜான்சி
எனை வீழ்த்தியது அவரென்றும்,
இல்லை இவரென்றும்
தோழா
பிறரைச் சுட்டிக் காட்டி சுயபரிதாபம்
கொள்ளாய்...
உன் சுயத்தை அதனாலே
கொல்லாய் ...
தீதுரைத்திருப்பான் அவன்
ஆய்ந்தறியாமல் வீழ்ந்தது நீயன்றோ!?
விழத்தாட்டியிருந்திருப்பான் இவன்
வீழேனென்று முயலாமல்
தரை தொட்டதும்
நீதானல்லோ!?
உலகம் தள்ளும் - உன்னை
மண்ணுக்குள் புழுதியாக்கிடவே
பற்பல வார்த்தைகள்
சொல்லும்.
உதறியே விலகிடு
உறுதியாய் நின்றிடு
வீழ்த்தும் கரங்களை
எதிர்த்தே நீ நின்றிட
நித்தமும் நிகழும்
இப்போராட்டத்தில் வென்றிட
தோழா நீயும்
எழுந்து வா , எழுந்து வா...
{kunena_discuss:1090}