(Reading time: 1 minute)

காத்திருக்கிறேன் - தாரணி

வீட்டு முற்றத்தில் 
வீதி மேல் 
விழி வைத்து 
மனம் வலிக்க காத்திருக்கிறேன் -

காலங்கள்  கரைந்து 
காடு செல்லும் முன் 
கால் கடுக்க காத்திருக்கிறேன் -

நரை ஓடி 
கண்  புரையோடி 
நாட்கள் நகர 
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் -

மடி மீது 
தோள் மீது 
விளையாடிய வழித்தோன்றல் 
எனை தேடி 
என்றேனும் வருவானென்று ..............

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.