(Reading time: 1 - 2 minutes)

தீபாவளி - விஷ்ணு பிரதீப்

அகச்சுடர் நம் மனதில் எரிய ..நல்லெண்ணெய் தேய்த்து தீய-
குணங்கள் கழுவி ஆனந்தக்குளியல் போடுவோம் ......புத்தாடைகள் 
உடுத்தி புதிய சிந்தனைகளுக்கு வித்திடுவோம்..பத்திக்குசிக்கள் பட்டாசுகளை பத்தவைக்க..நம் துன்பங்கள் எல்லாம் சரவெடியாய் வெடித்துச் சிறதட்டும்..பல வகை பலகாரங்களை எல்லாருக்கும் பங்களித்து பன்மை கொண்ட பழமை போற்றுவோம்..மத்தியான-
உணவோடு மனதிற்கு இனியவர்களை அரவணைத்துக் கொள்வோம் .
பாயாசத்திற்கு பின்னால் குட்டிதூக்கத்தோடு குறும்புகளை வளர்த்துக்கொள்வோம் ..மாலைக் கதிரவன் மறைந்ததும் மத்தாப்பூக் -
குச்சிக்களை நீட்டி ...வையகத்திற்கு வண்ணம் காட்டுவோம்..சங்கடங்கள் சங்குசக்கரமாய் சுழன்று சாம்பலாகட்டும்..
பொய்யும் புரட்டும் பொறி வானமாய் பொறிந்து பொசுங்கட்டும் ....
வானவேடிக்கைகள் காட்டி விண்ணில் விந்தை செய்வோம்...அதை விண்ணளானும் வியந்து பார்க்கட்டும் .....மரபுகள் மாறினாலும் மண்மனம் மாறாமல் கொண்டாடுவோம் தித்திக்கும்
தீபஒளித் திருநாளை!!!!!!!!!!!!!
 
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.