(Reading time: 1 - 2 minutes)

இயற்கையின்  இரவல் - விஷ்ணு பிரதீப்

பனிச்சாரல்  விழும் அழகிய மாலை பொழுது.மேகங்கள் ஒன்று குடி 
முத்தமிட்டுகொண்டு மழைத்துளிகளை மண்ணுக்கு இறைக்கும் ..
 
ஈரக்காற்றில் மரங்களின் மகிழ்ச்சி ஆட்டம் ..நதிகளின் ஓட்டப் 
பந்தயம்....மனசுக்குள் மண்வாசம் வீசும் ....
 
வளைந்து வளைந்து ஓடும் நீரை என் கண்கள் துறத்தும்...ஆசை 
பொங்கும் அடைமழைச் சத்தம் கதி குழல் கீதம் ...
 
கருமேகம் பொழியும் மைக்குழல் பெண்ணும் நீ தானே...
உன் பளிங்கு பாதம் துதிக்கும் தாதுவும் நான் தான்..
 
நீர்த்துளிகள் சறுக்கி விளையாடும் ஈர இலைகள் ...இன்பத்தின் 
உச்சம் ..இயற்கை விடு வாய்த்த மிச்சம்..
 
கொஞ்சி பேசும் குயில் ,நனைந்து ஆடும் நாணல் ,அருவி
கொட்டும்  சங்கீதம் ..மறந்து போகுமா ..
 
தித்திக்கும் மழைசாரலே  நீ விண்ணில் பிறக்கிறாய் ,மண்ணில் 
இறக்கிறாய்..ஆயினும் என்றும் வாழ்கிறாய் ..........
இயற்கயின் இரவலாக !!!!!!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.