(Reading time: 1 - 2 minutes)

விழித்து கொள் - விஷ்ணு பிரதீப்

பொதிந்து கிடக்கும் உன் பதின்மக் கூறுகள் 
பொய்த்து போனதா பெண் இனமே .... 

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ..அகம் 
புறம் மறந்து அடிபணிய மடமை 
ஏற்றாயோ ?? 

குழுமணம் மாறி ..ஒற்றைத் தாரம் 
ஏற்று குலமகள் ஆனதும் .குனிந்து 
போகத்தானே ...பெண் இனமே... 

தாவணி சுரிதார்கள் ..ஸ்கிர்ட் ஜின்சாக 
மாறினால் போதுமா ..வென்று விட்டாய் 
என்கிறாயே?? 

கற்பை கலங்கம் செய்து விட்டு காரணம் 
நீ தான் என்றுரைக்கும் கயவர்களுக்கு .. 
உன் பதில் என்ன பெண் இனமே .... 

பாஞ்சாலி துகிலுரியப்பட்டாள் ,சீதை 
சிறையடுகப்பட்டாள்...பாவங்களை 
சகித்தும் பொருத்தும் கொண்டாயோ ??? 

போரினை மூட்டினாய்....நாட்டினை 
வென்றுடுத்தாய் ..ஆயினும் உன் 
விடுதலை எங்கே ..சிந்தை செய் !! 

பெண்ணிய இலயக்கியத்தை தத்தெடுத்து 
திருத்தியமைத்தான் பாரதி..அவன் 
கனவுகள் நீயே பெண் இனமே ... 

புதுமை பெண் தழைத்தோங்க....படர்ந்திருக்கும் 
அகந்தை பதர்களை அகற்றிடுவாய் ...பெண் 
இனமே ..........! 

ஆதியும் அந்தமுமான பராசக்தியே ..புவியினை 
விதைத்தும் நீ ...அதை வளர்த்ததும் நீ..விழித்து 
கொள் பெண் இனமே.!!!!!!!!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.