தமிழன் !! - விஷ்ணு பிரதீப்
கம்யுனிசம் தோன்றாத காலத்தே .தனக்கும்
மிஞ்சியது தானம் என்பதை உலகிற்கு சொன்னவன்
என் தமிழன் ..!!
வறியவன் ஒருவன் வாசல் வந்தால் ,வயிற்றுக்குச்
சோறு போட்டு ,செலவுக்கு காசு கொடுத்து ..அவனைச்
செல்வந்தனாக்கி வழியனுப்பியவன் .அவன் ,!
பசியெடுத்துப் போய் ஒரு கலைஞன் .செத்து..
மடிகிறான் என்றால் ,தன்னையும் மாய்த்துக்
கொள்ள துணிந்தவன் ...அவன் ..!!
பச்சரிசி பொங்கவச்சு .....இரண்டு பக்கம்
தித்திக்கும் கரும்பு நட்டு...கதிரவன் அவனை
விருந்துக்கு அழைப்பான் .அவன் ..!!
புழுதி பறக்க ..பாய்ந்து வரும், கொம்பு
சீவிய முரட்டு காளைகளை மார் நிமித்து
எதிர்த்து நிற்கும் சிறுத்தை என் தமிழன் ..!!!
வங்காளக் கடலும் ,இந்தியப் பெருங் கடலும்
என் விட்டுப் பெண்களின் மீன் பிடிக்கும்
ஏரி களாம்..!!
தமிழச்சி புடவைக் கட்டுக்கும் ,பாவாடைத்
தாவணிக்கும் அலங்காரம் செய்யவே பிறந்ததாம்
நறுமணம் வீசும் மலர்கள் ..!!
அழகு செரிந்தவள் அவள்,வெறும் பொம்மை
என்றால்,வீர குதிரை ஏறி ஆங்கிலேயே நாய்களை
விரட்டி அடித்த வேலு நாச்சியும் அவளே ..!!
வீதி தோறும் மிளிரும் கார்த்திகை தீபங்களைப்
பார்த்து வெண்ணிலவும் வெட்கிப்போய்
மேகத் திரை போட்டுக் கொள்ளும் ..!!!
ஆலமரத் தடி கருப்பனும் ,எல்லைக் கோடு
அரிவா அய்யனாரும் காவல் காக்கும்
என் தமிழ்ச் சமூகம்..!!
வட்டெழுத்து களுக்கு வடிவம் குடுத்தான்
உ.வே.சா ...தமிழ் ஏடுகளில் உலகத்தை
வரைந்து வைத்தான் பாரதி ..!!!
இவன்,உயிர் கல்லறையில் அல்ல ,
நெஞ்சுரம் செத்துப் போன ஒவ்வொரு
தமிழனின் நெஞ்சிலும் ..!!!
' ஜானி ஜானி எஸ் பாப்பா 'என்பதை
ஏட்டிலிருந்து துக்கி விட்டு அங்கே 'ஓடி
விளையாடு பாப்பா..ஓய்ந்திருத்தல் ஆகாது
பாப்பா 'ஏன் எழுதி வைப்போம் ..!!
தமிழ்த்தாய்க்கு நம்மை அர்ப்பணித் தவளை .
கல்லறைப் பிணத்தின் குறியீடாக அழைப்பதை
தவிர்த்து அழகுத் தமிழில் 'அம்மா' என்று சொன்னால் என்ன ..!
அமெரிக்காவுக்கு அண்டம் அளக்கப் போனாலும்
பிரிட்டனுக்குபட்டம் படிக்கப் போனாலும்,நாசாவின்
மெத்த விஞ்ஞானி ஆனாலும் சரி,மறவாதே உன்னைப்
பெற்றவள் தமிழ்த் தாய் ..!!
பலமுறை சொல்லிருந்தாலும் மீண்டும் ஒரு
முறை சொல்லுகிறேன் ..
'தமிழன் என்பதில் பெருமை பட்டுக்
கொள்ளடா என் மானிடா...!!!'
{kunena_discuss:779}