இப்படிக்கு, ஓர் அகதி - விஷ்ணு பிரதீப்
நீளும் நினைவாய் ..
தாய்நாடு ..நிலவுப்
பொழுதின் நிழல்களாய்
ஏக்கம்.....யாருக்கும்
தெரிவதில்லை....!!
பாலுக்காக குழந்தையோடு
தாயும் அழுகிறாள்..
கரையேறிய பிணங்களாய்
மானம் மறந்து ,
மீசை மடங்கிப் போன
வாழ்க்கை ....
பசி வரும்போது
உரிமை மயங்கும்
ஏக்கம் ஓங்கும்
ஊக்கம் தொலையும்...
இருந்தும்,
இடுகாட்டில் பூத்த
பூச்செடி யென..
நீளும் நினைவுகளாய்
என் தாய்நாடு ............
- இப்படிக்கு,..
ஓர் அகதி.
{kunena_discuss:779}