(Reading time: 1 minute)

இப்படிக்கு, ஓர் அகதி - விஷ்ணு பிரதீப்

agathi

நீளும் நினைவாய் .. 
தாய்நாடு ..நிலவுப் 
பொழுதின் நிழல்களாய் 
ஏக்கம்.....யாருக்கும் 
தெரிவதில்லை....!! 

பாலுக்காக குழந்தையோடு 
தாயும் அழுகிறாள்.. 

கரையேறிய பிணங்களாய் 
மானம் மறந்து , 
மீசை மடங்கிப் போன 
வாழ்க்கை .... 

பசி வரும்போது 
உரிமை மயங்கும் 
ஏக்கம் ஓங்கும் 
ஊக்கம் தொலையும்... 
இருந்தும், 

இடுகாட்டில் பூத்த 
பூச்செடி யென.. 

நீளும் நினைவுகளாய் 
என் தாய்நாடு ............ 

- இப்படிக்கு,.. 
ஓர் அகதி.

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.