அவளின் டைரியில்… - மீரா ராம்
03. இதய ஊஞ்சல்
மனம் வெறுமை மட்டும் அல்ல, கணத்திலும் ஊசலாடுகிறது…
என் இதயக்கதவை திறந்து உள் வந்தவன் நீ மட்டும் தான்…
என் உடலே அதிரும்படி உன் இதயக்கதவை சாத்துவதும் நீ மட்டும் தான்…
உள்ளத்தில் வைத்து பூஜை செய்ய விரும்புகிறேன் உன்னை…
இன்று காதலனாக கொண்டாடுகிறேன்… --- நாளை…
கணவனாக கொண்டாட விரும்பியே கேட்கிறேன்…
நீயோ என்னை காலில் போட்டு மிதிக்கின்றாய்…
நான் சிதறிப் போவதில் உனக்கு ஆனந்தமா?...
என்னைப் பெற்றவர்களின் நிலையை நினைத்து அழுவதா?...
உன் விலகலை நினைத்து நான் பொருமுவதா?...
இல்லை… உன்னையே நினைத்து ஏங்கும் என்னை நோகவா?...
தெரியவில்லை… ஒன்றும் புரியவும் இல்லை…
மனம் நிர்மலாகி போனது… ஊமையாகவும் கூட…
என் உள்ளமென்னும் வீட்டிற்குள் நுழைந்தாய்…
நெஞ்சுக்கூட்டை அன்பால் முற்றுகையிட்டாய்…
காதல் என்னும் சாவி கொண்டு யாரும் திறந்திடாத
என் இரும்பு மனக்கதவை திறந்து உள் வந்தாய்…
இதய ஊஞ்சலில் சிலையென சமைந்திருந்த
என் இதயத்தை ஊஞ்சலை விட்டு பறித்தெடுத்தாய்…
அப்போதும் என் இதய ஊஞ்சல் ஆடவில்லை…
இதயத்தைப் பறித்தவன் அப்படியே செல்வது தானே?...
எதற்கடா… உன் நினைவை என் ஊஞ்சலில் கட்டி ஆட்டிச் சென்றாய்…
இப்போது என் செய்வேன் நான்?...
ஆடும் ஊஞ்சலை…. அது சொல்லும் உன் நினைவை…
எப்படி எதிர்கொள்வேன்?....
{kunena_discuss:784}