அவளின் டைரியில்… - மீரா ராம்
04. நாளை எதிர்நோக்கி
நிஜங்களில் உன்னை வெறுப்பதாய்
காட்டிக்கொள்வதும்…
யாருமில்லா தனிமையில் உன்னை
மூச்சாய் சுவாசிப்பதும்…
உனக்கு தெரியாத எனக்கு மட்டுமே தெரிந்த
இராணுவ ரகசியம்…
கோவிலுக்கு சென்றேன்….
சந்நிதியில் நின்றது மட்டுமே நினைவுள்ளது…
உன் பெயரும் உன் முகமும் மட்டுமே
வார்த்தையிலும் சிந்தையிலும்…
உன்னைப் பார்க்கும் ஆவல்
கனவிலும் நனவிலும் வாட்டுகிறது என்னை…
உன் குரல் கேட்க நரம்பெங்கும்
உயிர்ந்தெழுந்து சுருங்குகிறது…
பாய் விரித்து படுக்க முனைந்தும்
உன் நினைவுகள் கண்முன் வந்து போகிறதே…
ஏன் எனக்கு இந்த நிலை???????
உன் நியாபகங்களாய் மட்டுமே நான்…
என் நினைவு என்ன, நானே இல்லாத
இடத்திலும், காற்றிலும் நீ வசிக்கிறாய்…
விதியின் விளையாட்டுகளில் இதுவும் ஒன்றா???
உன் நிமிடங்களோடு இன்றைய தினத்தை முடிக்கின்றேன்…
நாளை எதிர்நோக்கி…
{kunena_discuss:784}