(Reading time: 1 - 2 minutes)

அவளின் டைரியில்… - மீரா ராம்

05. விரக்தி புன்னகை மட்டுமே என் இதழ்களில்

உன்னை மறந்ததாய் வெறுப்பதாய்

நடிப்பில் மட்டுமே நான் உணர்கிறேன்…

நிஜத்தில் அல்ல என்பது

என்னைப் படைத்தவனுக்கும்

என்னை ஆட்டிப்படைக்கின்ற உனக்கும் தெரிந்த ஒன்று…

என்ன நேர்ந்தது எனக்கு??? அறியேன்…

தினம் காலையில் உன் நினைவலைகளில் நீந்தி

இரவில் உன் கண்ணின் மணியோடு கலந்து

ஒரு நாளை கடந்து செல்கிறேன்…

யாரோ ஒருவருக்கு ராசி, நட்சத்திரம் கொடுக்கும் நிலை

எனக்கு ஏற்பட்டதும் கடவுளின் செயலா???

பொருத்தங்கள் இருந்தால் பெண் பார்க்கும் படலம்

நடைபெறும் என்பதும் விதியின் சதியா???

ராதை கண்ணனை காதலித்தாலும்

கண்ணன் மணமுடித்தது ருக்மணியை தானே!!!!!

கடவுளே விரும்பிய ஒருவரை மணக்காமல்

இன்னொருவரை மணந்த சம்பவம் உண்மையே…

இதில் மானிடப் பிறவி எடுத்த

சாதாரண மனிதப் பிறவி

நான் மட்டும் விதி விலக்கா என்ன???

உன்னையும் விடுத்தால் எனக்கான இந்த ஜென்ம இணையும்

உண்டோ உலகில்…

கடவுளே…

அவரும் என்ன செய்வார் பாவம்… ஹ்ம்ம்

விரக்தி புன்னகை மட்டுமே என் இதழ்களில்…

Avalin diary'l - 04

Avalin diary'l - 06

{kunena_discuss:784}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.