அவளின் டைரியில்… - மீரா ராம்
08. எப்படி நான் மறுப்பேன் கண்ணா?!?!
உன்னை மறக்க முடியாமல் தவிக்கும் வேதனையை
எப்படி நான் எதிர்கொள்வது???
நிஜமாய் மறக்கவே முடியவில்லை உன்னை…
மறக்க நினைக்கும் நேரங்களில் தான் அதிகமாய்
சுவாசம் கொள்கிறேன் உன்னை எண்ணி…
ஒன்று உன்னை மறக்கும் வழியைக்காட்டு…
இல்லை நான் இறக்கும் மார்க்கம் கூறு…
உன் நியாபகம் இல்லாத நான் இல்லவே இல்லை…
எந்த பாடல் கேட்டாலும் உன் நினைவு தான்…
வரிகளும் இசையுமாய் என்னுள் புகுந்து
என்னை ஆக்கிரமித்துக்கொள்கிறாய் முழுவதும்…
விடுபட்டு அதிலிருந்து வெளிவருவதற்குள்
உயிர் போய் உயிர் திரும்புகிறது எனக்கு…
தினம் தினம் செத்து செத்துப் பிழைக்கும்
இந்த நரக வாழ்க்கை தான் நீ கொடுக்கிறாய்…
முழு திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறேன்…
உன்னை உனக்காகவே நேசித்தவள், நேசிப்பவள்…
நீ தரும் இந்த மரண வலியை ஏற்க மாட்டேனா என்ன???
நிச்சயம் இது வலித்தாலும் சுகமே தரும்…
அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை…
ஏனென்றால் வலியோ, வேதனையோ, சுகமோ…
எதுவாயினும் அது நீ தருகிறாயே…
உன் பரிசை எப்படி நான் மறுப்பேன் கண்ணா???!!!!.....
{kunena_discuss:784}