(Reading time: 1 - 2 minutes)

அவளின் டைரியில்….. மீரா ராம்

13. யார் செய்த தீங்கு???

எந்த ஒரு காத்திருப்பிற்கும் பலன் நிச்சயம்…

மெய்தானா இந்த வரிகள்???

நானும் உனக்காக காத்திருக்கிறேன்…

வருவாயா என்னைத் தேடி???

கடிவாளமிடாத மனது கற்பனைக்குதிரையில்

சவாரி செய்து கொண்டே வருகிறது அணுதினமும்….

வீசுகின்ற காற்றினிலும், ஒளிர்கின்ற வெளிச்சத்திலும்

உணர்கிறேன், பார்க்கிறேன் ரசிக்கிறேன் உன்னை…

கடும் மழை பெய்யும் போது மின்னலாய்

உன் நினைவுகள் என்னை சூழ்கிறது குளிராய்….

இடி இடித்து பயமுறுத்துவது போல் மின்னலென

வந்த உன் நியாபகம் இடி இடித்ததும் சுயநிலை

திரும்பி எனைப் பார்த்து கேலி செய்கிறது

கைகொட்டி மிக மிக சத்தமாய்….

நீ என் அருகில் இல்லாததை நினைவூட்டி….

இயற்கையும் என்னைப் பழிக்கும் நிலை…

மனமறிந்து நான் தீங்கு செய்ததில்லை யாருக்கும்…

ஆனால் என் பெற்றோரை நினைத்து கலங்குகிறேன்…

உன்னை காதலித்து அவர்களுக்கு நான்

துரோகமும், பாவமும் செய்கிறேனா??

விரும்பவேண்டுமென்ற எண்ணத்தில் விரும்பவில்லை

நீயாக என்னுள் புகுந்தது யார் செய்த தீங்கு???

Avalin diary'l 12

Avalin diary'l 14

{kunena_discuss:784}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.