அவளின் டைரியில்….. மீரா ராம்
16.தூக்கம் கொள்வேனோ இன்று
ஐந்து நிமிடங்கள் தான் உள்ளது காதலர் தினம் பிறக்க…
என் காதலி என்றோ நீ கொன்று வீசி விட்டாய்…
அதுதான் அன்றே மரணித்து விட்டதே….
ஆனால் என்னால் உன் மேல் வைத்த காதலை
கொன்று வீச இயலாது போகிறதே ஏனடா???
கடவுளையும், இயற்கையையும், பறவைகளையும்
வரைந்து கொண்டிருந்த நான் இன்று முதன் முதலில்
உன்னை என் மனதில் வடித்தவனை வரைந்தேன்…
எல்லையில்லா புளகாங்கிதம் அடைந்தேனடா…
இன்று உன் புகைப்படத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை…
சுற்றம் மறந்து என்னை மறந்து உன்னை மட்டும் பார்த்தேன்…
புகைப்படத்தில் நீ தலைசாய்த்து உதடுகள் சுழித்து
சிரித்த விதத்தில் மயங்கியவள் இந்த நொடி கூட
வெளிவர முடியாது சிக்கிக்கொண்டேன் தானாக…
என்ன ஒரு வசியப்புன்னகை…
உன் கண்கள் நிஜமாய் காந்தம் தானோ???
ஒரு வினாடி பார்த்தால் கூட சுண்டி இழுக்கிறதே தப்பமுடியாதபடி…
உன் கேசத்தை வர்ணிக்க வார்த்தையே இல்லை….
அலைஅலையாய் காற்றி கலைந்து முன் நெற்றியில்
சிறிது அங்கும் இங்கும் நீண்டு வளைந்திருந்த முடி…
பெண்களைத்தான் அழகுக்கு உதாரணமாய் சொல்வார்கள்…
உன்னைப் பார்த்த பின் அதெல்லாம் விளையாட்டோ எனத் தோன்றுகிறது…
உன் கன்னத்துக்குழியில் சிறையுண்ட நான் தூக்கம் கொள்வேனோ இன்று…
{kunena_discuss:784}