(Reading time: 1 - 2 minutes)

அவளின் டைரியில் - மீரா ராம்

21.என்னுள் நீ மட்டுமே உயிராய்…

நெஞ்சுக்குழிக்குள் உன்னை புதைத்துக்கொண்டேன்…

நினைவலைகளில் உன்னை சேமித்துக்கொண்டேன்…

கருவிழிகளில் உன்னை கனவாகக்கண்டேன்…

கண்ணீர்த்திவலைகளில் உன்னை மட்டுமேக்கண்டேன்…

கனவோடும் நினைவோடும் நீ தான்…

நிழலோடும் உடலோடும் ஒட்டியிருப்பது நீ தான்…

இதயத்தில் நீங்காமல் வீற்றியிருப்பதும் நீ தான்…

எண்ணிலடங்கா எண்ணங்களில் மூழ்கியிருப்பதும் நீ தான்…

கைகளில் கைரேகையாய் என்னுடனிருப்பதும் நீ தான்…

நிஜங்களில் பொய்களில் என்றுமே நீ மட்டும் தான்…

பார்க்கும் இடங்களில் தெரிவது நீ மட்டும் தான்…

கேட்கும் ஒலிகள் ஒவ்வொன்றிலும் நீயே தான்…

தென்றல் என்னைத் தீண்டும்போது நியாபகம் நீ தான்…

மழையில் நடுங்கி நனைகையில் ஈரம் நீ தான்…

காய்ச்சல் வந்து படுக்கையில் மருந்து நீயே தான்…

சுயநினைவு இருந்தாலும் இல்லாவிடினும் நீ மட்டும்

நிறைந்திருக்கிறாய் என் ஒவ்வொரு நொடியிலும்…

தும்மல் வந்தால் உன் நினைவு தான்…

துரத்தல் வந்தால் உன் நினைவு தான்…

பேசும் வார்த்தையிலும் நீயே தாண்டா தெரிகிறாய்…

இருக்கின்றாய்… கலந்திருக்கின்றாய்…

மொத்தத்தில் என்னுள் நீ மட்டுமே உயிராய்…

Avalin diary'l 20

{kunena_discuss:784}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.