(Reading time: 6 - 11 minutes)

தனிமையில் உன்னோடு நான்… – மீரா ராம்

Love

இனிய காலை…

கற்பனைகள் நிஜமாகும் என அறியாத நிலை…

உன் அழைப்பு என் கைபேசியில்…

என்ன செய்கிறாய் என ஆரம்பித்து

ஒரு வேண்டுகோளுடன் முடித்த வேளை…

வெட்கம் சூழ்ந்தது என்னை…

 

உனைத் தூண்டி விட்டு ரசித்தேன்…

நீ வரமாட்டாய் என்று…

தயாராக இரு… வருகிறேன் பாரடி…

சொல்லிவிட்டு அணைத்துவிட்டாய் கைபேசியை…

ஒருவித சிரிப்புடன் அமர்ந்தேன்

நீ கூறியதை அசைபோட்டவாறு…

 

வாசலில் அழைப்பு மணி கேட்டு

சுயநிலை அடைந்தேன்….

யார் இந்த காலை நேரத்தில்???

யோசனையுடன் கதவைத் திறந்தவள்

ஆச்சரியத்தில் உறைந்து போனேன்…

கைகட்டி தோரணையுடன் நிற்கின்றாய் நீ…

 என் எதிரில் கள்ளச் சிரிப்புடன்….

 

வாவென வரவேற்று அமர செய்து,

ஏனோ திடீர் விஜயம்???

கேட்டேன் சலனமில்லாது…

தெரியாதா உனக்கு???

நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா???

நீயும் சீண்டி பார்த்தாய் என்னை…

 

உனக்கா நான் சளைத்தவள்!!!!???

தெரியாதே சொல்லு சீக்கிரம்…

வேலை இருக்கிறதென்று இல்லாத வேலையில்

என்னை பிணைத்துக்கொண்டேன்….

குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் நிலை…

திரும்பி உனைப் பார்த்தேன்….

கோபத்தில் சிவந்தது உன்முகம்…

கண்களில் தீ ஜூவாலை

கொழுந்துவிட்டு எரிந்தது…

 

என்ன பார்க்கிறாய்???? கிளம்பவில்லை…???

கேட்ட வினாடியில் உன் பதிலும்

சத்தமாக வந்தது…

விளையாடுகிறாயா???...

ஒழுங்காக விரும்பியதை கொடுக்காவிடில்

இருந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என

தர்ணா போராட்டத்தை கையிலெடுத்தாய்….

தாராளமாக இங்கேயே இரு…

ஆட்சேபனை எனக்கேதும் இல்லை என

தோள்களை குலுக்கினேன்…

 

சிறிது நேரம் சென்றது…

எந்த உரையாடலும் இல்லாது….

அமைதியாய்…

கள்ளம் கபடமில்லா மழலை முகம்…

அதில் கோபமும் பனி போல…

காற்றில் கலைந்த சிகையை

விரல் கோதி சரி செய்யும் அழகை

பார்வையாலே விழுங்கிக்கொண்டிருந்தேன்…

காதல்…. கண்ணில் பொங்கி வழிய…

 

கள்ளன் நீ…

கவனித்து விட்டாய் என்னை…

பார்வையை விலக்கினேன் சட்டென்று…

வெற்றி புன்னகை

உன் முகத்தில் கூத்தாடியதை

கடைக்கண் பார்வையில் அறிந்தேன்…

மௌனமாக உன்னை பார்த்துவிட்டு

மெதுவாக அங்கிருந்து அகன்றேன்…

 

நான் சென்றதுதான் தாமதம் என்பது போல்

அழுத்தமான காலடி ஓசையுடன்

நீ நெருங்கினாய் என்னை…

வெட்கம் ஒரு பக்கம்…

அச்சம் மறு பக்கம்….

கைகளை இறுக பிசைந்து

இறுக மூடிய விழிகளுடன் நின்றிருந்தேன்…

பின்னால் இருந்து என்னை

அணைத்தாய் மெதுவாய்…

அதே நேரம் தீவிரமாய்…

மின்சாரம் பாய்ந்தது போல் உணர்வு

மேனியெங்கும் ஓடி சிலிர்த்தது…

விடுபட எண்ணியும்

வழி தெரியாதிருந்த வேளை…

கார்குழல் முதலாக

பெற்றுக்கொண்டது உன் சூடான

இதழ் ஸ்பரிசத்தை…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.