அவளின் டைரியில் - மீரா ராம்
23. வஞ்சித்துக்கொல்கிறாயா அன்பே என்னை…
உன்னை மறக்கப் பல முயற்சிகள் செய்தேன்…
இருந்தும் தோல்வியை தான் தழுவினேன்…
எதற்கடா என் மனதினுள் கூடாரம் போட்டிருக்கிறாய்???
இப்படி என்னை இம்சிக்கிறாய்?... வதைக்கின்றாய்??...
நான் பாவம் இல்லையாடா?... என் கண்ணா….
உயிருள்ள மனுஷி தானே நானும்…
உணர்வுகள் எனக்கும் உண்டல்லவா ராஜா???...
பின் ஏன் என்னுள் புகுந்து கொண்டு வெளிவர மறுக்கிறாய்….
மறக்கவும் முடியவில்லை… இறக்கவும் இயலவில்லை…
நினைக்காமல் தடுக்கும் வழியும் தெரியவில்லை…
விட்டு விலகவும் மனமில்லை துளியளவும்…
போதும் உன் நியாபகங்கள்… முடியவில்லை…
அணியும் ஒவ்வொரு உடையும் உன்னை நினைவூட்ட
சாகாமல் செத்துப் பிழைக்கின்றேனே உன்னால்….
கருங்கல்லில் செய்ததா உன் மனம்???...
இல்லையே…
அதிலே சில காலம் நான் இருந்தேனே…
என்னை தலைமேல் வைத்து கொண்டாடினாயே…
செல்லம் கொஞ்சினாயே…
விலக முடியாமல் அழுத்தமாக ஒட்டிக்கொண்டிருந்தாயே…
இப்போது மட்டும் ஏன் தூக்கி எறிந்தாய்??...
பாராமுகம் காட்டுகிறாய்….???... பேச தடை விதிக்கிறாய்???
கல்லாய் சமைந்து போகிறாய்?... ஏனடா?...
வஞ்சித்துக் கொல்கிறாயா அன்பே என்னை…
{kunena_discuss:784}