(Reading time: 1 - 2 minutes)

அவளின் டைரியில் - மீரா ராம்

29. அடக்கமானதைப் போல வலியில்

உன்னிடம் ஒரு வார்த்தை பேச துடித்து நின்றேன்…

உன்னை அதிகமாய் இன்று நினைத்து வருந்தினேன்…

பேசத்தான் வந்தேன்… உன் பதிலினைக் கேட்டு

ஊமையாகி போனது என் வார்த்தை மட்டுமல்ல…

நானும் தான்…

இதயத்தை யாரோப் பிழிவது போல் உணர்ந்தேன்…

உன் மனதில் உதித்த காதலே உனக்கு கிடைக்கட்டும்…

மனைவியாக அவளே வந்தால் உன் சுகம் கூடுமல்லவா?...

சொர்க்கமும் கைஎட்டுமே உன் காதல் கைகூடினால்…

நிறைவேறட்டும் உன் ஆசை…

என் காதல்தான் மண்ணாகிப் போனது…

உன் காதலாவது பூத்து மலரட்டும் என் காதல் மண்ணில்…

வலி தான்… உள்ளம் துடிக்கிறது தான்..

ஆனாலும் உன் வலியின் முன் எனது ஒன்றுமே இல்லை…

நீயாவது சந்தோஷமாக இரு…

ஒரு காதலனாக என்னுடன் பேச விரும்பாவிடினும்

ஒரு தோழனாக என்னுடன் பேச மாட்டாயா?

என்று தான் உன்னிடம் கேட்க வந்தேன் இன்று…

இனி மேலும் அதற்கு வழியில்லை என்று தெரிந்து போயிற்றே…

கண் கலங்க இதயம் வலிக்க உதடு துடிக்க…

என் உணர்வுகளை நான் கட்டுப்படுத்திக்கொள்ள

படாதபாடு பட்டேன் துயரத்துடன் விழி மூடி…

இந்த இரவும் என் உறங்கா இரவுகளில் அடக்கம்…

ஆம்… என் மனமும் உடலும் அடக்கமானதைப் போல வலியில்…

Avalin diary'l 28

Avalin diary'l 30

{kunena_discuss:784}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.