(Reading time: 2 - 3 minutes)

01. இளம்பூவை நெஞ்சில்...  - மீரா ராம்

உன் வரவு அழகாய்...

மஞ்சள் நிறக்கதிர் வானெங்கும் பரவி பொழுதை புலர வைத்த வேளையில்,

என் மனதில் உனது சூரிய உதயம் இனிதே நிகழ்ந்தது

கூடவே என் இதழ்களில் மெல்லிய புன்னகையும் விரிந்தது

மெல்ல கண் மூடி உன்னை மீண்டும் உள்ளத்தில் உலவ விட்டுவிட்டு

எழுந்து கொள்ளவே விரும்பாது ஆடியசைந்து விழித்தேன்

படுக்கையை விட்டு அகலாது கை நீட்டி அருகில்

தூங்கிக்கொண்டிருந்த என் கைபேசியை தட்டி எழுப்ப

அது சிணுங்கிக்கொண்டே விழித்து எழுந்து இசைத்தது

காலை வணக்கத்தை உனக்கு சொல்லி அனுப்பினேன் குறுந்தகவலாய்

என்ன மாயம்உடனே பதிலும் வணக்கத்துடன் வர

அன்றைய நாள் இனிதே விடிந்ததாய் உணர்ந்தேன்

ஆசைகள் நெஞ்சில் அலையாய் பரவிட

கண்களில் கனவுடன் முழங்கால்களை மடித்து

பிடித்துக்கொண்டு உள்ளத்தில் உன்னை உலவ விட்டேன்

கன்னங்களில் தானாகவே செம்மை கூடியது

உன்னை எண்ணும் ஒவ்வொரு வேளையும்

இப்படித்தான் நான் மாறிப்போகிறேன்

என்னடா செய்தாய் என்னை???

இப்படி என்னை இம்சிக்கிறாயே ஏனடா???

இந்த புதுமை தான் காதலா???

இந்த இனிமை தான் காதலா???

அதிகாலையிலேயே இன்று உன் நினைவில் நான் சிக்கிக்கொண்டேனா

ஹ்ம்ம்இனி என்னாகுமோ என் மீதி பொழுது???

என் செல்லக் கண்ணாபோதுமடா

இந்த பூவையின் நெஞ்சுக்குள் தானே இருக்கிறாய்

பின்னே என்னடா???... இப்போது எனக்குள் செல்

செல்வாய் தானே?... என்று வெட்கத்துடன் இமைமூடிக்கொள்ள

என் விழிகளுக்குள் உன் வரவு அழகாய்

 

உன்னைத்தான் கண்டு சிரித்தேன்

நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்

என்னைத்தான் எண்ணி துடித்தேன்

எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்

பெண்மை பூவாகுமா???

இல்லை நாளாகுமா???

இது தேனோடு பாலாகுமா???...”

 

பூ மலரும்……….

Ilam poovai nenjil 02

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.