கற்பனை… – மீரா ராம்
கடிவாளமில்லா எண்ணங்கள்…
வியந்து போய்விடாத நேரங்கள்…
அடங்க மறுத்திடாத ஆசைகள்…
மிதக்க வைத்திடாத உணர்வுகள்…
காற்று தள்ளிடாத கரும்பாறை…
புயல் இழுத்திடாத ஓர் இலை…
அலை ஆட்கொள்ளாத நுரை…
மழை அரித்திடாத மண்…
களை பறித்திடாத வயல்…
வேர் இல்லாத மரம்…
தேன் கொண்டிடாத மலர்…
இமை அற்ற விழிகள்…
தேகம் மறந்த உயிர்…
கருவறை சுமக்காத சிசு…
மொழி கண்டிடாத நாடு…
சுருதி சேர்த்திடாத இசை…
தென்றல் கவர்ந்திடாத மனிதன்…
ஓசை எழுப்பாத கண்ணாடிவளையல்…
சிணுங்கிடாத கொலுசு மணிகள்…
மேகம் தவழாத வானம்…
நாணம் சூழ்ந்திடாத பெண்…
கானல் நீர் தென்படா பாலைவனம்…
கனவு ததும்பிடாத துயில்…
வெளிச்சம் நிறைந்திடாத சூரியன்…
பால்மழை பொழியாத வெண்ணிலா…
{kunena_discuss:779}