(Reading time: 1 - 2 minutes)

எந்தன் நெஞ்சில் உறவாய்… – மீரா ராம்

love

விழியோடு விழி கலக்கவில்லை…

கண்கள் பேசும் பாஷை அறிந்திடவில்லை…

பார்வையில் தடுமாறி நிலை சாயவில்லை…

ஓரப்பார்வையில் அணுஅணுவாய் ரசித்திடவில்லை…

உன் முகம் பார்த்து நாணி இமை தாழ்த்திடவில்லை…

கைகளால் முகத்தினை நான் மறைத்திடவுமில்லை…

எனினும், உன்னுடன் என் காதல் கருவானது…

ஆசைமுகம் பார்த்தால் தான் காதல் மலருமா?...

என்னுள் பூத்த காதல் உன் ஆசை முகமாகாதா?...

நேசம் தன்னை என்னுள் புகுத்தாதா?...

கள்வனே… களவாடினாய் நீ என் நெஞ்சத்தை…

மொத்தமாய் வசமிழந்து தொலைத்தேன் என் சித்தத்தை…

நித்தமும் காதல் நோய் கொண்டு சந்தித்தேன் மாற்றத்தை…

நீ எப்படி இருப்பாய் என யோசித்து யோசித்து

கண்முன் கற்பனையாய் உன்னை வடித்தேன்…

உருவம் நான் கொடுத்திடவில்லை - ஆனால்…

என் காதல் கொண்டு உயிர் கொடுத்தேன் உனக்கு…

எந்தன் நெஞ்சில் உறவாய்….

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.