(Reading time: 2 - 4 minutes)

02. இளம்பூவை நெஞ்சில்...  - மீரா ராம்

உன் மீதான என் காதலையும் எண்ணி… எண்ணி…

Ilam poovai nenjil

தவித்து துடித்திருந்த மனதினுள் திடீர் உற்சாகம்

மின்னல் போல் சட்டென வந்துவிட்ட உன் வார்த்தைகள்

கொட்டும் அருவி போல் என் நெஞ்சத்தில் சந்தோஷ சலசலப்பு

மௌனம் கலைத்து பேசிவிட்டாய் என்ற பூரிப்பா?

இல்லை எனக்கான பரிவு வந்ததென்று உணரவா?

எதுவாக இருந்தால் என்ன?.. நீ பேசினாயே

அது ஒன்று போதாதா எனக்கு?.. நான் மகிழ்ந்து கொள்ள

இதழ் தொட்டுவிட்ட புன்னகை எனக்கு வரமாய் இன்று

ஆம்நாடகமாய் சிரித்த பொழுதுகள் கழிந்து

நிஜமாகவே சிரித்து தொலைத்தேனோ என்னை உன்னிடத்தில்

தொலைந்தாலும் அதில் பேரின்பம் தானே கொள்வேன் நான்

பின்னே, உன்னை தானே அணுக்ஷணமும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்

உன் பெயரில் தானடா கரைந்து உருகிக்கொண்டிருக்கிறேன்

நிழலிலும் உனக்குத்துணையாய் வர காத்திருக்கிறேன்

ஹ்ம்ம்அதெல்லாம் சொல்லித்தீர்த்திட முடியுமா?...

இல்லை சொன்னாலும் என் குட்டிக்கண்ணனின் மூளைக்கு எட்டிடுமா?...

இரண்டே கேள்விகளில் அலைபாய்ந்த மனதை

அமைதிப்படுத்த முடிந்திடுமோ உன்னையன்றி மற்றொருவர்?..

நேரமில்லாது ஓடிக்கொண்டிருக்கும் தருவாயில்

அப்புறம் பேசுகிறேன் என்ற மாறாத வரிகள் நீங்காது ஒலித்த வேளையில்

எப்போது தாண்டா பேசுவாய் என ஏங்கிப்போயிருந்த எனக்கு

பரிசா உனது இந்த விசாரிப்புகள்???...

சொல்லடா என் செல்ல கண்ணா

பதில் சொல்வாய் தானே !!!…

இல்லை இப்பொழுதும் மீண்டும் ஹ்ம்ம் மட்டும் தானா?..

சிந்தைக்குள் உன்னை உலவவிட்டு வேடிக்கைப் பார்க்கிறேன்..

என்னடா மாயம் இது?... இப்படி நான் ஆகி போனேனே உன்னால்

அய்யோஹ்ம்ம்ம்என பெருமூச்சும் வெளிவருகிறதே தன்னால்

எப்படியடா கண்ணா அது?... மீண்டும் ஒரு முறை கேள்

எப்படி இருக்கிறாய்???... எங்கே இருக்கிறாய்?... இவைதானே அவை..

எனில் இதோஉன் கேள்விக்கான எனது பதிலும்

உன் நினைவில் உனக்கான என் தனி உலகத்தில்

உன்னையே நித்திரையிலும் என் விழித்திரையிலும் கண்டுகளித்து

மெல்ல இமை மூடி ரசித்துக்கொண்டிருக்கிறேன் உன்னையும்

உன் மீதான என் காதலையும் எண்ணிஎண்ணி 

பூ மலரும்……….

Ilam poovai nenjil 01

Ilam poovai nenjil 03

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.