06. இளம்பூவை நெஞ்சில்... - மீரா ராம்
கட்டிக்கொண்டாயா என்னை?...!!!…
மனதில் முட்டி முட்டி மோதும் உன்
எண்ணங்களில் உழன்று சிக்கித் தவிக்கையில்
என்னதான் ஆகுமோ எனக்கு திடீரென?...
எச்சில் கூட தொண்டைக்குள் மாட்டிக்கொள்ள
அப்படியே உன்னை இதயத்தில் உலாவ விட
இமைக்கதவுகளைத் திறந்து நீயும் வருகிறாய் என் கண்ணின் மணிக்குள்….
காற்றுக்கும் காதல் சொல்லிக்கொடுக்கும் உன் கேசம்…
மெத்தை எனும் விரல் இடுக்கில் அது நுழையும்போது
மாட்டிக்கொள்ள விழைகிறேன் நானும் அந்த பஞ்சு போர்வைக்குள்…
வசியத்தை வெள்ளை கருப்பு திரையாய் கொண்டிருக்கின்றாயோ
கண்கள் என்னும் பெயரில் என்னை உன் வசமிழுப்பதற்காகவே…!!!
ஒற்றை சொல் சொல்லும் உதடுகள் என்றாலும்
அதை பிரிக்காது எப்போதும் மூடிவைத்திருக்கும்
அழுத்தமும் ஏன் தானோ கண்ணா?...
உரசிக்கொள்ள வாகாய் கூர் நாசி இருந்தும்
அதை மென்மையாய் தடவிப்பார்க்க எண்ணுகிறேனே ஏன்?
என் எண்ண ஓட்டங்களை அறிந்தது போல் சட்டென
என்னிடமிருந்து விலகி நின்று சிரிக்கிறாயே ஏனடா?...
உன்னை செல்லமாக அடிக்க கை ஓங்க,
திடுமென உன் உருவம் காணாமல் போகிறது…
பட்டென நான் விழி திறக்க,
உள்ளம் ஒருநொடி திகைத்து
பின் தானாக இதழ்கள் விரிய, கையில் இருந்த
உன் புகைப்படத்தில் பார்வையை பதித்தேன்…
சரிதான்… இதில் பார்த்ததற்கே இந்த நிலைமையா?..
எனில் நேரில் பார்க்க நேரிட்டால் என்னாகுமோ?..
ஆர்வத்தில் மனம் ஏங்க, கண்முன் தானாய் காட்சிகள் விரிகிறது…
இடம் பொருள் அனைத்தும் பார்வைக்கு அகப்படாது போய்விடுகிறது…
ஆம்… என்னையே மறந்து உன்னை ரசித்து பார்க்கின்றேன்…
கொஞ்சமும் விழியகற்றாது உன்னில் தொலைந்தவளாய்…
தொலைந்தவள் அப்படியே இருந்திடாமல் அடுத்து
நான்…………..
சட்டென காட்சிகளிலிருந்து வெளிவந்து முகத்தை
பத்துவிரல்களால் மூடிக்கொள்ள, தாறுமாறாய் துடிக்கும் இதயத்தை
கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் தவித்து போய்,
அப்படியே மெய்மறந்தவளாய் உன் புகைப்படத்தினை பார்த்து சிரித்திட
கிசுகிசுப்பான உன் குரல் காதோரமாய் விழுகிறது, இதோ….
“என்னடி?... சுற்றம் பார்க்காமல் கட்டிக்கொண்டாயா என்னை?...” என…
பூ மலரும்……….
{kunena_discuss:779}