09. இளம்பூவை நெஞ்சில்... - மீரா ராம்
என் காதலின் எதிரொலியா...!!!…
நெஞ்சம் சொல்லிடும் உணர்வு
இன்னமும் இதமாய் எனக்குள்…
என்ன செய்து நான் இதிலிருந்து வெளிவருவேன்?...
வெளிவரும் ஆசை கூட உருவாகுமா?...
வேண்டாம்… இப்படியே இன்னும் கொஞ்சம் இருந்திட
மனம் ஏங்கி தவிப்பது எனக்கே புதுமையாய்…
எனில் இது நிஜமாகவே உண்மைதானா?...
இல்லை ஆழ்ந்த துயிலில் கனவு என்னும் மாளிகையில்
உன் காதல் போர்வையை இழுத்து போர்த்தி
அனைத்தும் மறந்து உறங்கிக்கொண்டிருக்கின்றேனா?...
ஹ்ம்ஹூம்… ஏதும் புரியா நிலை…
இதயச் சுரங்கத்தில் எங்கும் நிறைந்திருந்தவை,
சலசலக்கும் அருவிக்கரையின் ஆர்ப்பரிப்பில்
நான் அமைதியாய் நின்றிருந்த போதும்
எனக்கு கேட்பது, என்ன மந்திரமோ!!!!
என்னை மறந்து நான் நிற்கும் ஒவ்வொரு வேளையும்
உன் குரல் என் காதோரமாய் ஒலிப்பதும் ஏனோ!!!
எனக்குள்ளே அது பதிந்துவிட்டதோ!!
இல்லை புதைந்துவிட்டதோ!!!
இன்னதென்று பிரித்து சொல்லிடத் தெரியாமல் போக
தமிழிலும் சொற்கள் தீர்ந்து தான் போயிற்றோ எனக்கு மட்டும்…
மனதை ஒருநிலைப்படுத்தி நான் வேலை செய்தாலும்
திடீரென்று என் மனமும் உன் வசம் சென்றுவிடுகிறதே ஏன்!!!
ஏன் ஏன் ஏன்….. பலமுறை உரக்க கத்தி
ஓங்கி உயர்ந்த மலைகளின் மேல் நின்று
நானும் கேட்ட தருணத்திலும்
ஒரு குரல் எட்டிப்பார்த்தது!!!!........
மென்மையாக…. அதே சமயம்
என்னை அந்த நொடியே
வேரோடு சாய்த்து வீழ்த்திவிடும் எண்ணத்தில்….
ஆம்… என்னவனின் குரல்….
அது உள்ளத்தின் அறைகூவலா?..
இல்லை… என் காதலின் எதிரொலியா!!!!
பூ மலரும்……….
{kunena_discuss:779}