(Reading time: 2 - 4 minutes)

14. இளம்பூவை நெஞ்சில்...  - மீரா ராம்

மெய்மறந்து போனதென்ன???!!!…

Ilam poovai nenjil

ஓயாது வாயாடிக்கொண்டிருக்கும் நான்…

என்னைப் போலவே என் மனதும்

ஓயாது உன் பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கிறது…

நினைக்கையிலே இனிக்கும் இன்பம்

உனது நினைவுகளுக்குத்தான் இருக்கிறதோ?...

அறிந்திருக்கவில்லை நானும்…

நேரத்தை நீட்டிக்கவே பேச்சுக்கொடுக்கும் நான்..

தூரத்தை முன்னிறுத்தியே பதில் சொல்லும் நீ…

விந்தையாக இருந்தாலும் அதனை ஏற்றாக வேண்டுமே…

நாலு கேள்விகள் கேட்டால் இரண்டிற்கு வரும் விடை…

மீதி இரண்டும் காணாமல் போன பட்டியல் தான்…

என்ன சொன்னாலும் வந்திடும் ஹ்ம்ம் மட்டும் தெளிவாய்…

எப்படித்தான் முடிகிறதோ இப்படி உன்னால் மட்டும்…

யோசித்து யோசித்து மேலும் பைத்தியமானது தான் மிச்சம்…

ஹ்ம்ம் வந்தாலும் போதுமென பல நாள்

அந்த ஒற்றை வார்த்தைக்காகவே தவமிருந்த

கதையும் உண்டு என் வாழ்வில்…

மல்லிகையாய் வாசம் பரப்பும் உன்னை ஆசைதீர

நுகர்ந்திட விழையும் போது சட்டென தடுத்திடுவாய் நீயும்…

ஏன் தான் உனக்கு இந்த ஓரவஞ்சனையோ?...

பாசமாய் சில வார்த்தைகள் பேசிவிட்டால் போதும்

அதை கண்டுகொள்ளாதிருக்க நீ செய்யும் வேலைகள் இருக்கிறதே…

அப்பப்பா…. சொன்னாலும் தீர்ந்திடாது என்றும்…

நேசத்தையே தவிர்ப்பவன், காதலை மட்டும் உள்வாங்கிடுவாயா என்ன?..

காதல் எனும் காற்று வீச ஆரம்பிப்பது அறிந்ததுமே

உடனேயே வைத்திடுவாய் பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளியை…

அப்போது வரும் கோபத்திற்கும் ஆத்திரத்திற்கும் அளவே இருந்திடாது…

எனினும் வெளிப்படும் ஆதங்கம் அத்தனையையும் ஓரங்கட்டி விடும்…

எதுக்குடா இப்படி இருக்கிறாய்?...

நூறு முறை எனக்குள்ளே கேட்டும் கொள்வேன்…

இருந்தும் அதனால் என்ன நேர்ந்திடக்கூடும்?..

உன் மீதான காதல் கூடுவதை தவிர….

ஹ்ம்ம்….

பார்… உன்னுடன் பேசி பேசி இந்த ஹ்ம்ம் ம்ம்ம் தொற்றிக்கொண்டது

என்னையும் அறியாமலே…

புன்னகையுடன் அதரங்கள் விரிய,

மனதினுள் சிறு ஏக்கமும் துளிர்க்கிறதடா கண்ணா…….

என் காதலும் உன் நெஞ்சத்தை ஸ்பரிசிக்குமா??....

உனது ஹ்ம்ம்ம் என்னோடு கலந்தது போல்!!!…. என் ராஜா!!!…
 

பூ மலரும்……….

Ilam poovai nenjil 13

Ilam poovai nenjil 15

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.