(Reading time: 2 - 3 minutes)

15. இளம்பூவை நெஞ்சில்...  - மீரா ராம்

மலரென இதழ் விரித்து!!!…

Ilam poovai nenjil

மகிழ்ச்சியில் மனம் மிதப்பதென்பது இதுதானா?...

எனில் இதுநாள்வரை நான் இதை அறிந்திடாததும் ஏனோ?...

கேள்வி சிந்தனைக்குள் எழும்போதே அதை தள்ளிவைத்துவிட்டு

மீண்டும் சந்தோஷ வானில் சிறகடித்து பறக்கிறேன்

உள்ளமெங்கும் நிறைந்துவிட்ட காதலில்…

ஒரு நொடி போதுமா?... என் அதரங்களில் சிரிப்பை ஊற்ற?...

செய்துவிட்டாயே ஒரே விநாடியில்….

உனக்கே உண்டான மாயமா அது?

இல்லை உன் காதலுக்கான அடையாளமா?

என்னவென்று சொல்லுவாள் இந்த பேதை?...

மனம் எங்கும் உற்சாகக்கூச்சல் ஒலிக்க,

கண்கள் கண்ணீரால் தழும்பி நிற்க

வார்த்தைகள் எல்லையில்லா இன்பத்தில் வெளிவருகிறது

தன்னால் எனக்குள்ளிருந்து…

எப்படியடா உன்னால் இது சாத்தியமானது?...

இலகுவாக என்னில் ஆனந்த மை எழுதி போனாயே…

காணத்தான் தேடுகிறாயா?... எனில்,

உன் தேடலையும் கண்டுகொண்டேனே நான்….

நீ என்னை அழைத்திட்ட அந்த ஓர் நிமிடம்

இப்பவும் எனக்குள் இனிக்கிறதடா என் செல்லக்கண்ணா….

போதுமடா… இது…

இப்பிறவிக்கு இது போதுமென்று நினைத்தாலும்

இன்னும் ஒரே ஒரு ஏக்கம் என்னுள்….

உன் பரந்து விரிந்த மார்பில் ஓர் முறை,

ஓரே ஓர் முறை நான் சாய்ந்திட்டால் போதுமடா...

வரமே என் கைசேர்ந்தது போல்

இப்பாவையும் அத்தருணமே மொட்டவிழ்ந்திடுவேனோ???...

உன் நெஞ்சில் மலரென இதழ் விரித்து!!!... என் ராஜா!!!....

பூ மலரும்……….

Ilam poovai nenjil 14

Ilam poovai nenjil 16

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.