கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 28 - இரு வார்த்தையில்… - மீரா ராம்
நெஞ்சம் முழுதும் உன் காதல் நிரம்பி வழிய
கொஞ்சம் என்னையும் கண்ணெடுத்து பாரேண்டா …
மஞ்சம் சேர எண்ணம் கொண்டிருப்பவளை
வஞ்சம் இல்லாது சேர்த்துக்கொள்ள தயக்கமும் ஏண்டா…
தஞ்சம் நீயே என்றுரைப்பவளையும்
கஞ்சம் கொண்டு தள்ளி நிற்க வைக்கிறாயே எதற்கடா?...
நேசம் மட்டும் போதும் என நான் இருந்தாலும்
தேசம் தாண்டி நிற்கும் எல்லைக்கோடும் ஏனடா வகுக்கிறாய்?...
நான் உன்னையே நினைத்திருக்க,
நீயோ என்னிடத்தில் விளையாட,
ஏண்டா இப்படி வதைக்கிறாய்?...
வாய்விட்டு தான் சொல்லிடேண்டா உன் காதலை…
நான் உன்னிடத்தில் கோபம் கொண்டு ஒருநாள் முகம் தூக்கிட,
நீயும் அதனை ரசித்து பார்த்திட்டாய்…
போடா… பேசாதே… என தள்ளி நின்றால் போதும்
அருகில் வந்து என் முகத்தினையே உற்றுப் பார்த்தாய்…
நிலம் பதித்த பார்வையுடன் நானிருக்க,
மெல்ல என் தாடை பிடித்து உன்னைப் பார்க்க செய்தாய்…
காதலை சொல்லிவிட்டால் போதும்தானே?...
கேள்வியாய் நீ என்னைப் பார்த்திட,
ஆம் என்பது போல் என் தலை அசைந்தது…
உன்னிடமிருந்து வரும் அந்த வார்த்தைகளுக்காக
நான் ஆவலுடன் காத்திருக்கையில்
உன் இதழ் திறந்து உதிர்த்திட்ட வார்த்தையில்
அப்படியே நின்றேன் புரியாமல்…
என்னடி?.... புரியலையா?...
நீ செல்லமாக என்னிடத்தில் வினவ,
நான் என்ன கேட்டேன்?... நீங்க என்ன சொல்லுறீங்க?...
போங்க… பேசாதீங்க… என நான் விலக முற்படுகையில்
அய்யோ என் செல்ல லூசு… இங்க வா…..
சொல்லியபடி என் கைப்பிடித்த நீ,
என் விழி பார்த்து, என் காதல் நீ தான்… நீ மட்டும் தான்…
அதைத் தானே நான் சொன்னேன்… என
குறும்புடன் நீயும் கூறிவிட்டு சிரிக்க,
அப்போது தான் எனக்கு உறைத்தது
நீ என் மீது கொண்டிருக்கும் காதல்…
அர்த்தம் புரிந்ததின் விளைவாய், எனக்குள் நாணம் எட்டிப்பார்க்க
“ஹே ஹேய்… இங்க பாரு…” என என் முகம் நிமிர்த்தி
நீ என்னை பார்க்க வைக்க முற்பட,
“ஹ்ம்ம்… ஹூம்…” என்ற சிணுங்கல்
உன் முகத்தில் குறுநகையை வரவழைக்க
மெல்ல இருகரம் விரித்தாய்…
விழிகளில் ஏனோ துளிர்த்த நீருடன் நான் நிற்க,
உன் விரல் என் கண்ணீர் அழுத்தி துடைத்து,
“லூசு….” என கூறியதோடு, வா என்றழைத்திட,
அதற்கு மேலும் தாமதிக்காது
உன் மஞ்சத்தில் தலை சாய்த்து
உன் மார்போடு புதைந்து போகையில்,
உன் இதழ் மலர்ந்து விகசித்தது…
கூடவே, நினைவில் நீ சொன்ன உன் காதலும் வந்து போக,
அந்நேரம் உன் அதரங்களும் உரைத்ததே
மீண்டும் உன் காதலை…
“என் சகி….” என்ற இரு வார்த்தையில்!!!… என் ராஜா!!!…
மிகவும் அவசர அவசரமாக எழுதினேன்… படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள்…
ஒரு சில சொற்களை, திரும்ப திரும்ப பிரயோகப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்…
மீண்டும் அடுத்தவாரம் இளம்பூவை நெஞ்சில் கவிதைத் தொடரில் சந்திக்கலாம்… நன்றி…
பூ மலரும்……….
{kunena_discuss:1088}