ஒரு நாளும் உன்னை மறவாத ! - மைத்ரேயி
இதென்ன புது உறவு
எதனால் இந்த சலனம் ?
நண்பனாய் நீ என் கரம் பற்றாத நாட்களா ?
இன்று ஏன் உன் தொடுதல் புதுவித உணர்வை தருகிறது ?
நண்பனாய் நீ வீசாத பார்வையா ?
இன்று ஏன் என்னால் அதை எதிர்கொள்ள முடியவில்லை ?
நண்பனாய் நீ என்னோடு நடக்காத பாதையா ?
இன்று ஏன் என்னை உரசும் உன் தோள் பொல்லாத கதை சொல்கிறது ?
நண்பனாய் நீ அழைக்காத பெயரா ?
இன்று ஏன் என் உதடுகள் என் பெயரையே அசைபோடுகிறது ?
நண்பனாய் நீ பேசாத பேச்சா ?
இன்று ஏன் உன் கனிவில் என் இதயம் நனைகிறது ?
நட்புக்கும் காதலுக்கும் இடையில்
திட்டவட்டமாய் மாட்டிகொண்டேனடா உன் பிரியமானவள் ..!
தோழனாய் எனை திட்டினாலும் சரி
காதலனாய் எனை ஏற்றுகொண்டாலும் சரி
ஒரு நாளும் உன்னை மறவாத
இனிதான வரம் வேணும் எனக்கு !