எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா? - மைத்ரேயி
இரவானால் உறக்கம் பிடிக்கவில்லை
பகலானால் உலகை பார்க்கவில்லை !
அறையிலேயே அடைந்திருந்தேன்
நீ வரும்வரை !
நீயும் வந்தாய்
கண்களுக்குள் பார்த்தாய் !
" என்னடா " என்றாய் ?
வார்த்தைகள் விக்கி கொண்டது !
திரும்பி நடந்தாய் !
உயிர்போகும் வலியில்
முகத்தை அறைந்துகொண்டேன் !
அருகில் வந்தாய் !
முகத்தை உன் கரங்களில் ஏந்தினாய் !
பெற்றேன் உன் முதல் முத்தம் நெற்றியில்
விடிந்தது என் விடியாத இரவுகள் ஒரே நொடியில் !
கட்டிகொண்டாய் என்னை
உள்ளம் கேட்டது
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?