(Reading time: 1 minute)

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா? - மைத்ரேயி

இரவானால் உறக்கம் பிடிக்கவில்லை

பகலானால் உலகை பார்க்கவில்லை !

அறையிலேயே அடைந்திருந்தேன்

நீ வரும்வரை !

 

நீயும் வந்தாய்

கண்களுக்குள் பார்த்தாய் !

" என்னடா " என்றாய் ?

வார்த்தைகள் விக்கி கொண்டது !

 

திரும்பி நடந்தாய் !

உயிர்போகும் வலியில்

முகத்தை அறைந்துகொண்டேன் !

அருகில் வந்தாய் !

முகத்தை உன் கரங்களில் ஏந்தினாய் !

பெற்றேன் உன் முதல் முத்தம் நெற்றியில்

விடிந்தது என் விடியாத இரவுகள் ஒரே நொடியில் !

கட்டிகொண்டாய் என்னை

 

உள்ளம் கேட்டது

எதிர்பார்த்த அந்நாளும்  இதுதானா ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.