06. ராதா கிருஷ்ணன் காதல் - ராதை தோழியிடம் தூது - புவனேஸ்வரி
அருந்ததி, ஆருயிர் தோழியே வா
ராதையை ஏங்க வைத்த மன்னனை காண் !
கண்ணின் மணி நீயென்று கவி சொன்னான்
அவனை எண்ணியே சிந்தும் என் கண்ணீரே வீண் !
மடிமீது உறங்க வைத்து மயக்கம் தந்தான்
இன்றுமலர் இவளது அருகாமை சுமையென்றுநொந்தான் !
தேன்சிதறி தெவிட்ட வைக்கும் குரல் உனதுஎன்றான்
இக்குரலினால் அழைக்கிறேன் மறைந்தே நின்றான் !
எந்த பூவில் மணம் அதிகம் அவனறிவான்
இவள் பூவுள்ளம் வாடியதை அவனறியான் !
வருடும் தென்றல் எத்திசை என்றறிவான்
என் எட்டுத்திசையும் மன்னவனின் வாசல் என்றறியான் !
புன்னகைக்கும் முகம் அழகென்று அவன் உரைப்பான்
என் புன்னகையின் மர்மமேஅவன் என்பதை மறப்பான் !
என்ன பிழை செய்துவிட்டேன் அவனது ராதை
அதை புரியாமல் வரட்சியாகும் எந்தன் பாதை !
என்னருமை தோழி என்றும் நீதான் என்றாயே
உன்னிடமே கெஞ்சுகிறேன் அவனிடம் இதை சொல்வாயே !
லீலைபுரியும் தேவன் அவனுக்கு நேரமிருந்தால்
ஒரு கணமேனும் என்னை வந்து தழுவச் சொல்லடி !
நேசம் எனும் நீரினிலே மூழ்கிவிட்டேன் !
பாசம் எனும் பாலையிலே வாடி விட்டேன் !
அன்பெனும் அமிலத்தை அருந்திவிட்டேன் !
என்னை காதலுடன் தழுவி கொஞ்சம் மீட்கச் சொல்லடி!
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்
{kunena_discuss:779}