ஆண்களுக்கு நன்றி - புவனேஸ்வரி
பெண்ணென பூமிதனில் பிறந்துவிட்டால்,
பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம் !
என்றானே முண்டாசு கவிஞன்,
ஆண் என்ற திமிரில் துகிலுரியும்
அந்த கயவர்களை பற்றி அன்றே
கண்டுகொண்டுவிட்டானே என் பாரதி !
இன்பமும் அமைதியும் சூழ்ந்திருக்க வேண்டிய
அழகிய புவியில் யார் தந்த சாபம் இது ?
பூக்களால் எங்கெங்கும் அலங்கரிக்க வேண்டிய பூமியில்
பெண்ணின் மேலாடை குருதிக் கரையில் அலங்கரிக்க படுகிறதே !
கவிர்ச்சியூட்டும் ஒப்பனைதான் காரணம் என்றீர்
மூன்று வயது சிறுமிக்கு என்ன தெரியும் ஒப்பனையை பற்றி ?
உணர்ச்சிகள் தூண்டும் உடைகள் என்றீர்
எழுபது வயது மூதாட்டியிடம் அப்படி என்ன உணர்ச்சிகள் கிளர்ந்துவிட்டது ?
கத்தியால் பதம் பார்த்த காயத்தில்
தீ வாரி இறைத்தது போல ஊடங்களும் பத்திரிக்கைகளும் !
தினசரி பெண்ணின் பரிசுத்தம் கலைக்கபட்ட செய்தியை
ரசிப்பதற்காகவே உரைப்பது போன்ற பாணியில் நாளிதழ்கள் !
ஊடகங்கள் உயர்ந்தன அதைவிட ஒருபடி
மாதம் ஒரு முறை கணக்கெடுப்பு !
" குற்றம் புரிந்தவனுக்கு என்ன தண்டனை அளிக்கலாம் " ?
கறக்கின்றனர் மக்களிடம் சுடச்சுட பதில்கள் !
ஆனால் இதுவரை காணவில்லை ஓர் மாற்றம்
கணினியில் கோபமாய் பதில்கள் கொடுத்தும் !
வானொலியில் உணர்ச்சிபொங்க பதிலளித்தும்
கிடைத்தது என்னவோ தொகுப்பாளரின் "கருத்துக்கு நன்றி "
என்ற பதிவு மட்டும்தான்!
நீதியில் ஏதும் பெரிய மாற்றமில்லை
என் வீதியிலும் தர்ம தேவதை வளம் வரவில்லை !
சொன்னான் எங்கிருந்தோ ஒரு பெரியவன்
ஏழு மணிக்கு மேல் வெளிவராதே என்று !
அய்யா பெரியவரே,
பெரிதொரு கூண்டு கட்டி எங்களை அடைத்து விடுங்களேன் !
அல்லது சிறைச்சாலையில் குற்றவாளிகளை வெளியேற்றிவிட்டு
எங்களை அங்கு பூட்டி வையுங்கள் !
சூரியன் உதிப்பது தப்பல்ல
அதன் கதிர் உன் மேனியில் படுவதுதான் தப்பு!
என்று வாதிடும் வஞ்சக நெஞ்சங்களை கூருபோடவே
ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் காளி அவதரிக்கிறாள் !
ஆண் என்பவன்
உறவுகளை உண்டாக்குவதில் பிரம்மனாகிறான் !
உறவுகளை காப்பத்தில் விஷ்ணுவாகிறான் !
துன்பங்கள் எரிப்பதில் சிவனாகிறான் !
ஆனால் இங்கு மட்டும்
துச்சாதணன்களின் நடுவில் ஒருசில தேவர்கள் !
வேலியே பயிரை மேய்கிறது என்பதா ?
கடலே கடல்ஜீவன்களை விழுகியது என்பதா ?
வேரே மரத்தை சாய்க்கிறது என்பதா
தாயே சேய்களை கொள்கிறாள் என்பதா ?
தூணிலும் துரும்பிலும் இருப்பேன் என்றானே
அவள் தாவணி பரிக்கபட்டபோது அவன் எங்கு சென்றுவிட்டான் ?
அழைத்தால் வருவேன் என்றானே
அவள் பெண்மை அழியும் கூக்குரல் அவனை எட்டவில்லையா ?
ஒளவையின் இளமையை முதுமையாய் மாற்றிய
ஆணை முகத்தான் கணேஷன் எங்கே ?
எங்களையும் உருமாற வைத்துவிடு இறைவா
தினம் தினம் கயர்வர்களின் பார்வையினாலே
துகிளுரிக்கப்படும் எங்கள் அவலநிலையை பார் !
மலராய் நாங்கள் மலரும்முன் மொட்டகவே எங்களை கருகவிட்டுவிடு !
அல்லது எங்களை தொட்டால்
அவன் எறிந்துவிடுவான் என்றொரு வரமாவது பிட்சையாக தா !
ராமனின் ஜானகியை தன்னோடு சேர்த்துக் கொண்ட பூமித்தாயே
கயவன் எனது கூந்தலை பற்றும்போதே
பூகம்பமாய் வந்து என்னை விழுங்கிவிடு !
நீ எங்களுக்கு தந்த ஒரே ஆறுதல்
பெண்ணை சதை மலராய் பார்க்காத சில ஆண்கள் தான் !
துச்சாதனன் எனும் ஆணால் துகிளுரிக்கப்பட்டாள் பாஞ்சாலி
மாதவன் எனும் ஆணால் காக்கவும் பட்டாள் அவள் !
ராவணன் எனும் ஆணால் கடத்தப்பட்டாள் சீதை
ராமன் எனும் ஆணால் ரட்சிக்கபட்டாள் அவள் !
இதன் மூலம் தேவம் சொல்லவரும் நீதி என்ன ?
ஆண்களால் அபாயமும் உண்டு
ஆண்களால் அபயமும் உண்டு என்றா ?
அப்படி என்றால் இத்தகையே ஆண்களை நான் போற்றிதானே ஆக வேண்டும்?
அலுவலகத்தின் அதிகநேரம் வேலை செய்கையில்
அக்கறையாய் பாதுகாக்கும் அலுவலக காவலர் ,
கண்ணீரில் தோள் சாயும்போது
அதை சாதகமாக்கி கொள்ளாத காதலன் ,
நேரம் காலம் இல்லாமல் நடுஇரவில் பேசினாலும்
கல்மிஷம் இல்லாமல் கண்ணியம் காட்கும் நண்பன் ,
பிரசவத்திற்கும் அறுவை சிகிச்சைக்கும் வரும் நோயாளிகளை
காமத்துடன் காணாத மருத்துவன் ,
யார் என்று தெரியாமல் பொது இடத்தில் உதவிட்டு
ஒரு நன்றிக்கு கூட புன்னகையை மட்டும் பதிலாய் சிந்திவிட்டு
சாலையை கடக்கும் சாதாரண குடிமகன்,
இவர்களை நான் போற்றிதானே ஆகவேண்டும் ?
கொதித்து கொண்டிருக்கும் எரிமலையாய் பெண்மனம்
அதை பாகாய் உருகவைப்பது ஆணின் கண்ணியமும் காவலும் தான் !
இன்றும் கண்ணியம் தவறாமல்
என்னை பெண்ணியவாதி என்று முத்திரையிடாமல்
சமூகத்தில் சரியான பார்வையில் நோக்கும்
என் பாரதி குடிகொண்டிருக்கும் அனைத்து
ஆணுள்ளத்திற்கும் எனது நன்றி !
{kunena_discuss:779}