09. ராதா கிருஷ்ணன் காதல் - முடியட்டும் ராதையின் பந்தம் - புவனேஸ்வரி
கண்ணனின் லீலையை கேளாயோ தோழி
என் கண்ணனின் லீலையை கேளாயோ தோழி !
என்னிடத்தில் இன்னொருத்தி பெயர் உரைப்பான்
நான் கண்ணீர்விடும் முன்னே என் துயர்துடைப்பான் !
என் அகத்தில் அவனது வதனம் விதைப்பான்
நான் வார்த்தையில் அதை கூறினாலோ எள்ளி நகைப்பான் !
அங்கும் இங்கும் மறைந்திருந்து தேட வைப்பான்
என் காதல் கொண்ட கண்களையும் வாட வைப்பான் !
நியாயம் தானா என் கண்ணா என்று கேட்டால்
கன்னம் காயமெல்லாம் சௌக்கியமா என்றே முத்தமிடுவான் !
கோபமோ அவன் மீது வருவது இல்லை
என் தாபமோ அகத்தில் இருந்து தீர்வதும் இல்லை !
அவன் என்னென்ன செய்தாலும் ரசிக்கின்றேன்
நான் கண்ணனின் காதலிலே திளைக்கின்றேன் !
கண்முன் நின்றாலும் தூரம் ஆகிறான்
கண்காணா வேளையிலும் அன்பால் அணைக்கிறான் !
என்ன தவம் செய்திருந்தான்
எப்படி அனைவரின் காதலையும் பெறுகின்றான் ?
அன்பின் அமுதசுரபியாய் தெரிகிறான்
என் அகத்தில் குடிகொண்ட மாதவனே !
நினைக்கும்போதே இனிக்கின்றான்
மறக்க முடியாமல் தித்திக்கின்றான் !
இணைந்துவிட்டேனடி அவன் இதயகூட்டுக்குள்
ஏக்கம் ஏதடி அவன் கரங்களின் சிறையினுள் ?
போதுமடி இந்த ஜென்மம்
பெற்றுவிட்டேன் சர்வ சுகந்தம் !
கள்வனின் காலடியில்
தொடங்கி முடியட்டுமே ராதையின் பந்தம் ..!
{kunena_discuss:779}