பிரிவின்றி தொடர்ந்திடவா? - புவனேஸ்வரி
என்னை செல்லமாய் அழைத்த உன் இதழ்களில்
இன்று இன்னொருத்தியின் பெயர் !
என்னை கள்ளத்தனமாய் ரசித்த விழிகளுக்குள்
இன்று இன்னொருத்தியின் உருவம் !
என் உளறல்களை சேகரித்த உன் செவிகளில்
இன்று இன்னொருத்தியின் குரல் !
என்னிடம் திமிராய் நீட்டி பேசும் விரலில்
இன்று இன்னொருத்தியின் மோதிரம் !
என் செவியை திருகிய கைகள்
இன்று இன்னொருத்தியின் கைகளுக்குள் !
என்னை நானே தொலைத்த உன் சிகையில்
இன்று இன்னொருத்தியின் கரம் !
என்னை முழுதாய் அர்பணித்த உன் மனதினுள்
இன்று இன்னொருத்தியின் வருகை !
என்னவனே ,
பிரிகிறேன் உன்னையும் உலகையும் !
மீண்டும் உன்னை தேடி வருகிறேன்
உனது மகளாக !
அப்படியாவது நமது பந்தம் பிரியாது தொடரட்டும் !
{kunena_discuss:779}