(Reading time: 1 - 2 minutes)

பிரிவின்றி தொடர்ந்திடவா? - புவனேஸ்வரி 

sad

என்னை செல்லமாய் அழைத்த உன் இதழ்களில்

இன்று இன்னொருத்தியின் பெயர் !

 

என்னை கள்ளத்தனமாய் ரசித்த விழிகளுக்குள்

இன்று இன்னொருத்தியின் உருவம் !

 

என் உளறல்களை சேகரித்த உன் செவிகளில்

இன்று இன்னொருத்தியின் குரல் !

 

என்னிடம் திமிராய் நீட்டி பேசும்  விரலில்

இன்று  இன்னொருத்தியின் மோதிரம் !

 

என் செவியை திருகிய கைகள்

இன்று இன்னொருத்தியின் கைகளுக்குள் !

 

என்னை நானே  தொலைத்த உன் சிகையில்

இன்று இன்னொருத்தியின் கரம் !

 

என்னை முழுதாய் அர்பணித்த உன் மனதினுள்

இன்று இன்னொருத்தியின் வருகை !

 

என்னவனே ,

பிரிகிறேன் உன்னையும் உலகையும் !

மீண்டும் உன்னை தேடி வருகிறேன்

உனது மகளாக !

அப்படியாவது நமது பந்தம் பிரியாது தொடரட்டும் !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.