(Reading time: 1 - 2 minutes)

வீழ்வேன் என்று நினைத்தாயோ - புவனேஸ்வரி 

Get up

உள்ளம் என்று எண்ணி

பள்ளத்தில் விழுந்தேன்!

 

காதலைத் தேடி

கானலுடன் கை கோர்த்தேன்

 

உணர்வுகள் மறுத்தது

உதடுகள் உலர்ந்தது

 

உறவுகள் கண் மறைந்தது

உலகமே அர்த்தமற்ற போனது

 

கற்பனையை கரயாண் தின்றது

சொப்பனமும் அற்பம் ஆனது

 

எழுதுகோளும் சோம்பலைத் தழுவியது

நானும் சாம்பலாகிட தவித்தேன்

 

உயிரின் விளிம்பில்

உண்மை உணர்ந்தேன்

 

என்னை நேசிக்க

நீ யார்?

என்னை நிராகரிக்க

நீ யார்?

 

அன்னை தந்த உயிரை

அந்நியனுக்காய் தியாகம் செய்வதா?

 

மாற்றுத்திறனாளிகளும் சாதிக்கும் மண்ணில்

மங்கை இவள் மண் புழுவுக்கு இரையாவதோ

 

எழுந்தேன், வீழ முடியா உயரம்

நடந்தேன், தொடர முடியா தூரம்

 

சிரித்தேன், செவி அதிரும்படி

வென்றேன், என்னை நானே

 

பிரிவில், விதியை சபித்து

உலகை மறந்து

உயிர் தியாகம் செய்யும் கோழைகளைப்போல்

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.