(Reading time: 1 minute)

கரையும் அலையும் - புவனேஸ்வரி 

Shore

ஒரு அடி உன்னை நோக்கி வைத்தாலே

பத்து அடி தூரம் எனை தூக்கி எறிகிறது விதி .. !

 

அரை நிமிடம் உன்னுடன் சிரித்தாலே

பல மணிநேரம் எனை புலம்பவிட்டு பார்க்கிறது காலம்..!

 

உன் நிழல் நான், என்று சிலிர்க்கும்போதெல்லாம்

உன் நிஜத்தை அபகரித்து செல்கின்றன பல உறவுகள்..!

 

உன்னுடன் இணைந்து வாழ நினைக்கும்போதெல்லாம்

மரண தண்டனை விதிக்கின்றது வாழ்க்கை..!

 

கரை,  உன்னை தொட்டிட

அலையாய் நான் பொங்கும்போதெல்லாம்

என்னை இழுத்து பிடி(ரி)க்கின்றது கடல்..!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.