(Reading time: 1 - 2 minutes)

என்னோடு போகட்டும் ! - புவனேஸ்வரி 

Girl

இனிப்பு கசப்பு

உவர்ப்பு துவர்ப்பு

காரம் புளிப்பு

எந்த சுவையையும் அறியவில்லை நான் !

 

இரவு பகல்

மாலை மதியம்

எந்த காலமும் கண்டுக்கொள்ளவில்லை நான் !

 

மழை வெயில்

குளிர் வெப்பம்

எந்த நிலையையும் உணரவில்லை நான் !

 

சுற்றும் பூமி

சுழலும் காற்றாடி

துடிக்கும் இதயம்

ஓடும் காலம்

எதைக் கண்டும் நகரவில்லை நான் !

 

உணர்வெல்லாம் மறுத்துப்போய்விட

எங்கே விட்டுச் சென்றாயோ அங்கேயே

அசையாதிருக்கிறேன்..!

 

காரணம் அறிந்திருந்தாலாவது

அடுத்த காரியத்தை தேடி இருப்பேன்

நீ சொல்லாமல் போய்விட்டாய்

நான் காரணத்தை தேடி அலைகிறேன் !

 

இதயம் வெடித்தும் இம்மியளவும் நகர்வில்லை

எங்கெல்லாம் தவறிழைத்திருப்பேன் என்று

அலசி ஆராய்கிறேன்..!

 

உன்னை சந்தித்த நாட்களை எல்லாம் அசைப்போடுகிறேன்..

இப்பிறவி முடிவதற்குள் கண்டுப்பிடித்துவிடுவேன் காரணத்தை!

ஆனால் உன்னை ?

 

எங்கு தொலைத்தேன் என்று தெரியாமல்

எவ்விடம் தேடுவேன் உன்னை ?

 

சலிப்பு தட்டிவிட்டது எனக்கு

உன்மீதல்ல, என் மீதுதான் !

நீ எட்டி உதைக்கிறாய் என்று அறிந்தும்

கடல் அலையாய் மாறி உன் பாதத்தில் யாசிக்கிறேன்.!

போதும், என் எதிர்ப்பார்ப்புகளுக்கு நீ பலியாகிட வேண்டாம்.!

வலியோ வரமோ அது என்னோடு போகட்டும்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.