(Reading time: 1 - 2 minutes)

 உன்னுடன் உரையாடிடும்போது - புவனேஸ்வரி 

 

என் உயிரின் ரகசியமே,

உன்னுடன் உரையாடிடும்போது மட்டும்,

காற்றில் அபிநயம் பிடிக்கிறேன்!

கள்ளத்தனமாக சிரிக்கிறேன்!

கன்னங்கள் சிவக்கிறேன்!

எனக்கே நான் அழகாய் தெரிகிறேன்!

எண்ணங்களிலும் மலர்ச்சி கொள்கிறேன்!

எண்ணியதெல்லாம் ஈடேறியதாய் உணர்கிறேன்!

உன் சிந்தனையை சுவைக்கிறேன்!

என் சிந்தையை மறந்து மயங்குகிறேன்!

சிலிர்த்து உன்வசம் சங்கமிக்கிறேன்!

உன் மகத்துவத்தை இசை மீட்டுகிறேன்!

உன் தெளிவினை ஓவியமாய் வரைகிறேன்!

தூக்கம் விழிக்கிறேன்!

துக்கம் மறக்கிறேன்!

மொத்தத்தில் புவனத்தின் அத்தனை

இன்பங்களையும் நொடியில் உணர்கிறேன்!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.