(Reading time: 1 - 2 minutes)

தாயும் நீயே தோழியும் நீயே... - தங்கமணி சுவாமினாதன்

அன்புத் தாயே-நீ இன்று..

அகவை எண்பத்தொன்றில்..

அடியெடுத்து வைக்கிறாய்..

அடடா...காலம்தான் எப்படிக்

கண்மூடித் திறப்பதற்குள்

காற்றாய்ப் பறக்கிறது....?

உனக்குச்....

சின்னதாய் உருவம்..

சிதையாத இளமை...

பண்பட்ட நெஞ்சம்...

பகட்டில்லா வாழ்க்கை..

அன்புக்கே முகவரி நீ..

உந்தன் முகவரியில்-எங்கள்

அனைத்துக் குடும்பங்களும்

ஒட்டு மொத்தமாய்க் குடியேற்றம்..

தர்மம் போதிக்கும்"வியாசரின் புத்தகம்" நீ..

வாழ்வை விளக்குகின்ற "வல்மிகி வார்த்தையும்" நீ..

னீதியைப் புகட்டுகின்ற "பஞ்சதந்திரக்" கதைகளும் நீ..

மொத்தத்தில் வாழ்க்கை நெறிகளை வார்த்தையால்..

மட்டுமின்றி..வாழ்ந்தே காட்டுகின்ற..

"வாழும் இலக்கியம்" நீ....

உந்தன் அன்புச் சிறகுகளுக்குள்-நாங்கள்

பாசமாய் அடைபட்டோம்...

ப்ரிய சகியே..ப்ரியமான அம்மாவே...

நீ இன்னும் நூராண்டு வாழ வேண்டும்-அதற்கு..

இறை அருள் புரியவேண்டும்...

நீ எனக்குத் தாயாய் மட்டுமல்ல..

தோழியாயும் ஆகின்றாய்..

நீ தாயுமாய் ஆனதால்..

உன்னை எனக்கு வாழ்த்தும் வயதில்லை..

வணங்கினிற்கின்றேன்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.