இது போலே...சில காதல்... - தங்கமணி சுவாமினாதன்
அவனும்,அவளும் காதலர்கள்..
சினிமா,பீச்,பார்க்,மோட்டல்,
ஹோட்டல்,மால்ஸ்,ஃபால்ஸ்
அங்கிங்கெனாதபடி ஜோடியாய்...
நீயின்றி நானில்லை..
நானின்றி நீயில்லை..
என்னுயிர் நீதானே..
உன்னுயிர் நான்தானே..
நம்மின் காதல் தெய்வீகமானது
அதையும் தாண்டி புனிதமானது..
நம்மது போலே காதலுண்டோ இங்கே..
நம்மைப் பிரிக்க யாருண்டு இங்கே..
நீ ஜூலியட் நான் ரோமியோ..
நான் மஜ்னு நீ லைலா..
நீ அனார்கலி நான் சலீம்..
னான் அம்பிகாபதி நீ அமராவதி..
நீ ஆரியமாலா நான் காத்தவராயன்...
இறைவனும் நம்மைப் பிரிக்க
நிமிடமும் நினைக்கமாட்டான்..
உனைக் காணாத கண்ணும்..
கண்ணல்ல கண்ணே..(அவன்)
உனை மறந்தால்-என்
உயிரில்லை கண்ணா..(அவள்)
இனிக்க இனிக்க திகட்டத் திகட்ட
அலுக்க அலுக்க அலைந்து திரிந்து..
அன்பை(?)கொடுத்து அன்பைப் பெற்று
முடிந்து போனது- நாட்கள்..
முன்னூற்றுச் சொச்சம்...
என்னை மன்னிக்க வேண்டுகிறேன்..
(அவனிடம் அவள்)
என்னவாயிற்று என்னுயிர்த் தோழி..
(அவளிடம் அவன்)
என் வருங்காலக் கணவனை-என்
தந்தைதான் தேர்ந்தெடுக்க..
வழியேதும் தெரியவில்லை..
வருத்தமின்றி ஒப்புக்கொண்டேன்..
ஓகே..ஓகே அன்புத் தோழி-என்
தாயும் தன் மருமகளைத்- தானே
தேந்தெடுக்கத் தயக்கமின்றி
ஒப்புக்கொண்டேன் தட்டிடவே..
மனது இல்லை...
காதலென்று கட்டுண்டோம்..
காசா பணமா களித்திருந்தோம்
இனி நட்பாய் பிரிந்திடுவோம்
என் வாழ்க்கை என் கையில்..
உன் வாழ்க்கை உன் கையில்..
பிரிவோம்... மறந்திடுவோம்.
{kunena_discuss:779}