கண்ணன் என்னும்...மன்னன்... - தங்கமணி சுவாமினாதன்
கண்ணா..மணிவண்ணா..உனை வா வா..
என அழைத்தும் நீ வாராமல் இருப்பதென்ன...?
நான் பாடும் இக்கானம் உன் செவியில் விழவில்லையோ..
வழியும் என் கண்ணீர் உன் பாதம் தொடவில்லையோ...
நான் விடும் மூச்சு உன் நீல மேனியைத் தீண்டவில்லையோ..
என் நினைவு உன் மனதில் இன்னும் எழவில்லையோ..
(கண்ணா..மணிவண்ணா)
உன் இதழ் முத்தம் எனக்கு வேண்டாம்..
உன் குறுஞ்சிரிப்பே எனக்குப் போதும்..
உன் உடல் அணைப்பு எனக்கு வேண்டாம்..
உன் அருளணைப்பு எனக்குப் போதும்..
உன் விரல் தீண்டல் எனக்கு வேண்டாம்..
உன் மனத் தீண்டல் எனக்குப் போதும்..
உன் மஞ்சத்தில் எனக்கிடம் வேண்டாம்..
உன் நெஞ்சத்திலெனக்கிடம் போதும்..
எனக்குத் தோழிகள் இல்லை கண்ணா..
உன்னிடன் தூது நான் அனுப்பி வைக்க..
இதோ.. இப் பூங்காற்றை அனுப்பி வைப்பேன்..
அது உன் கேசம் வருடி.. என் பாசம் சொல்லும்..
மேகத்தை அனுப்பிவைப்பேன்..அது..
என் முகம் தனை உனக்குக் காட்டும்..
மழைத் தூறலை உனக்கனுப்பி வைப்பேன்..
அது உன் உடல் தொட்டு என் மனம் சொல்லும்..
வண்ண மலர்கள்.. வாசமதை அனுப்பி வைப்பேன்..
வாசமது என் நேசமதை உனக்குச் சொல்லும்..
தாயும் தந்தையும் எனக்கு வேண்டாம்..
நீமட்டும் எனக்குப் போதும்..
தோழிகள் எனக்கு வேண்டாம்..என்.. சகி.. நீயே ஆவாய்...
ராஜாதி ராஜன் வேண்டாம்..ராஜ போகமும் எனக்கு வேண்டாம்.
எல்லாமும் நீயே கண்ணா..என்று நீ வருவாய் மன்னா?
ராதையின் மடியின் மீது ராசலீலை செய்கின்றாயோ..?
கோபியர் கொங்கை மீது கண்மூடிக் கிடக்கின்றாயோ..?
இன்னுமா அலுக்கவில்லை..?என்னை ஏன் நினைக்க வில்லை?
உன் ஆவியில் என்னுயிர் சேர்க்க...அழைக்கின்றேன்..வருவாய் நீயே
இப்பேதையின் உயிரில் சேர விரைந்து னீ வருவாய் கண்ணா..
{kunena_discuss:779}