(Reading time: 2 - 3 minutes)

தொழிலாளர் தினம்.. - தங்கமணி சுவாமினாதன்

மே முதல் நாள் உலகமெங்கும்

உழைப்பாளர் தினம்-

உழைக்கும் வர்க்கத்தினர் வாழ்வு--

உயர்ந்திட வாழ்த்துவோம் அவர்களை.

ஆனாலும் என் அன்புச் சகோதரா..

நடுத்தர குடும்பத்து நம் பெண்களைக்

கொஞ்சம் னினைத்துப் பாரேன்... 

தினம் தினம் அவர்கள் பல தொழில் செய்யும்

பாங்கைப் பாரேன்..

வீட்டை கூட்டிச் சுத்தம் செய்கையில்..

துப்புரவுத் தொழிலாளியாக..

துணிகளைத் துவைத்து வெளுக்கும் னேரம்.

சலவைத் தொழிலாளியாக..

வீட்டினர் அனைவரின் பசியைப் போக்கும்

சமையல் தொழிலாளியாக...

பாத்திரம் கழுவி பளிச்சென ஆக்கும்

சர்வென்ட் மெய்டாக..

குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிப்..

புரியவைக்கையில் ஆசிரியையாக..

போன்பில்,கரன்ட்பில்கட்டும்போது..

எடுபிடியாக..

இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ..?

தொழிலாளர்கட்கு அவ்வப்போது

அரசு விடுமுறை...அரை நாள் விடுப்பு..

வாராவாரம் சண்டேயன்றும் விடுமுறை உண்டு..

பெண்களுக்கென்று அப்படி இங்கு ஏதும் உண்டா?

ஆண்டில் ஓர்னாள் அவர்களுக்கென்று

விடுமுறை உண்டா?

வருடம் முழுதும் உழைக்கும் அவர்கள் சலிப்பைப்போக்க.

சகோதரா..நீயோ உன் வளர்ந்த மகனோ-- ஓர்னாளாயினும்..

உட்காரவைத்து ஒரு கோப்பைத்" தேனீராவது"

கையில் கொடுத்து ம்கிழ்வித்ததுண்டா?

தன்.. குடும்பத்திற்காய் ஓயாமல் உழைக்கும்-இவ்..

உழைப்பாளிக்கு....

மாலை போட்டு கிரீடம் சூட்டி...

மரியாதை... செய்தல் வேண்டாம்..

நன்றி கலந்த நாலு வார்த்தை இதமாய்ச் சொல்லி

கை குலுக்கி உங்கள் அன்பைக் காட்டுதலாவது கூடாதா?

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.