பெண்ணே உன் கதி இதுதானா..? - தங்கமணி சுவாமினாதன்
பெண் குழந்தை பெற்றதால்..
கட்டிய மனைவியையும்..
பெண்ணாய்ப் பிறந்ததால்
பெற்ற மகளையும்..
ஐந்து வருடமாய்ச் சிறை வைத்து
அரை வயிற்றுக்குச் சோறிட்டு..
என்னவொரு மடமையிது
எப்பேர்ப்பட்ட கொடுமையிது
ஆணோ பெண்ணோ எக்குழந்தை
பிறந்தாலும் அதைப் பெற்ற
பெண்ணல்ல அதற்குக் காரணம்..
கூடிப்பெற்ற "கூ"முட்டை ஆணே
காரணம்..இந்த உட்பொருள் அறியாத
"மென்'பொருள் துறையோனே..
உனைக்கண்டால் பெண்கள் நாங்கள்
உனை ஏறி மிதிப்போமடா..உன் முகத்தில்
எச்சில் உமிழ்வோமடா..
பாரதி பிறந்த மண்ணில் நீ ஏனடா பிறந்தாய்?
மெலிந்த உடல் பயந்த பார்வை-பெற்றமகளோடும்
அரைவயிற்றுச் சோற்றோடும் அடைந்து கிடந்த
அப்பெண்ணைப் பார்க்க தாய்மை பொங்கும்
என் நெஞ்சம் தவிக்குதடா...
பெண்ணினம் உனைச் சபிக்குதடா....
மூன்றும் பெண்ணாம் இன்னொருத்தன்..
வீதிக்கு விரட்டுகிறான் விரும்பிக்கட்டிய மனைவியை..
இப்படி அன்றாடம் பெண்களுக்கு நிகழும் கொடுமைக்கு
என்றைக்கு இறைவன் தீர்ப்பு எழுதுவான்?
இறைவா..பெண்களைய் நாங்கள் பிறந்தது..
எங்களுக்கு நீ தந்த வரமா?சாபமா?
{kunena_discuss:779}