(Reading time: 1 - 2 minutes)

நவராத்திரி தேவியே வருக..நலங்கள் பல தருக.. - தங்கமணி சுவாமினாதன்

Sri Devi Magishasura Mardhani

அதோ... வரா பாரு வரா பாரு வெம்புலி மேலே...

துர்கா ஆயுதங்கள் கையிலேந்தி வரிப் புலி மேலே..

கொடும்... அசுரனையே அழிக்க வரா..

அம்பிகைதானே..

நம்மைக்... காக்க வரா காக்க வரா..

சண்டிகை தானே...

புலி மீது ஏறிவரும் துர்கையும் அவளே..

தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் அவளே..

வீணைதனைக் கையிலேந்தும் வாணியும் அவளே..

நம் வீணான எண்ணங்களை அழிப்பவள் அவளே...

அண்டங்கள்... அனைத்தினையும் காப்பவள் அவளே..

மும்மூர்த்திகளை விஞ்சி நிற்கும் சக்தியும் அவளே..

சகல ..நலங்களையும் அள்ளித்தரும் அன்னையும் அவளே..

நம்மையென்றும் காக்கவரும் நவ...காளியுமவளே...

நம் வீட்டு... கொலுவினிலே சிம்மம் மீதினிலே..

கம்பீரமாய் அமர்ந்திருக்கும் பரம்பொருளவளே..

ஊசி  மீது தவமிருந்து... காசினியைக் காக்க வந்த...

கன்னியாகுமரி வாழும்... கன்னிகையவளே..

நவராத்திரி தேவியந்த ..நாயகியை நாம் என்றும்..

நாவார மனமார... கொண்டாடி வணங்கிடுவோம்...

நலம் பல பெற்றிடுவோம்....

அனைவருக்கும் தசரா வாழ்த்துக்கள் .அன்னையின் அருள் அனைவருக்கு கிட்டட்டும் நன்றி..

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.